ஒரு சிறைவாசி 63-07-17 1....கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நீர் இதற்கு முன்பு செய்துள்ள மகத்தான கிரியைகளை நாங்கள் கேள்விப்பட்டு, மீண்டும் இங்கே...மிகுந்த எதிர்பார்க்குதலுடன் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம். அது எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்து, இன்றிரவு ஏறெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அருளப்படும் என்று விசுவாசிப்பதற்கு எங்களை அபிஷேகிக்கிறது. நீர் ஒவ்வொருவரையும், வேண்டுகோள்விடுத்துள்ள யாவரையும், அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் அறிந்திருக்கிறீர். முக்கியமாக கர்த்தாவே, மரணத்தருவாயிலுள்ளவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் ஆத்துமாவில் ஏற்கனவே சமாதானம் இல்லாதிருந்தால் அவர்களுக்கு சமாதானத்தை கொண்டு வாரும். அவர்களுடைய சரீரங்களுக்கு சுகத்தை கொண்டு வாரும். கர்த்தாவே, இதை அருளும். 2.ஒன்றாக கூடிவந்துள்ள எங்களை ஆசீர்வதியும். இந்த புதன்கிழமை இரவு ஜெபக்கூட்டத்துக்காக நாங்கள் கூடி வந்துள்ளமையால், எங்கே இரண்டு அல்லது அதிகம் பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே எங்களோடு நீர் இருப்பீர் என்பதை அறிந்திருக்கிறபடியால் கர்த்தாவே, நாங்கள் நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு உமது வார்த்தையை எங்களுக்கு நீர் தந்தருள வேண்டுமென்று நாங்கள் உம்மிடத்தில் வேண்டுகிறோம். கர்த்தாவே எங்களுடனே பேசி, எங்கள் இருதயங்களை அனல் மூட்டி, வித்தியாசமுள்ளவர்களாக்கும். கர்த்தருடைய வருகை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறபடியால், எங்களுக்கு முன்னால் உள்ள அந்த மகத்தான நேரத்துக்காக நாங்கள் எங்களை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொள்வதென்று அறிந்து கொள்ளும்படி செய்யும். 3.இந்த ஜனங்கள் அருமையாயுள்ள விசுவாசத்தை அவர்கள் கண்டுகொள்ள ஆரம்பித்து, விசுவாசம் எதைக் குறிக்கிறது என்பதை அறிந்துள்ள இவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துக்கிறோம். நடக்கவிருக்கும் ஆராதனைக்காகவும் கூட உமக்கு நன்றி செலுத்தி, நீர் ஏதோ ஒரு காரியத்தை செய்யப் போகிறீர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, நீர் பண்டைய நாட்களில் செய்தது போல செய்வீர் என்னும் எதிர்பார்த்தலுடன் நாங்கள் காத்துக்கொண்டும், நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, தேவன் இக்கடைசி காலத்திற்கென வாக்களித்துள்ள வாக்குத்தத்தங்களை ஊற்றுவதற்கு நேரம் நெருங்கிவிட்டதென்றும் விசுவாசிக்கிறோம். 4.இப்பொழுது தேசங்கள் அனைத்திலும் உள்ளவர்களுடன் நீர் இருக்க வேண்டுமென்று நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். இன்றைக்கு உலகத்தின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களின் தேவைகளைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தாவே, அவர்களுடைய விண்ணப்பங்களை அவர்களுக்கு அருளிச் செய்யும். உலகின் பல்வேறு பாகங்களில் இந்த மகத்தான காரியத்தை எதிர் நோக்கியுள்ளவர்கள், தேவனுடைய மகத்தான கரம் உலகம் முழுவதும் அசைவதைக் காணும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். 5.எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே, உமது ஆவியினாலும் உமது வார்த்தையினாலும் எங்களை சிட்சித்து, நாங்கள் எங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு, கீழ்படிதலுள்ள ஊழியர்களாய், தேவனுடைய சித்தத்தில் கீழ்படிதலுள்ள ஊழியர்களாயிருக்கச் செய்யும். ஆதி கிறிஸ்தவர்கள் செய்ததை எங்கள் இருதயங்களில் சிந்திக்க முயற்சித்து, அதை நாங்கள் நினைவுபடுத்திக் கொள்வோமாக....உம்மோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டிருந்தவர்களை நாங்கள் சந்திப்போமானால், நாங்கள் எத்தகைய மக்களை சந்திக்கிறோம் என்று நாங்கள் நினைவில் கொள்வோமாக. அவர்களுடைய முகங்கள் விசுவாசத்தினாலும், சந்தோஷத்தினாலும் எவ்வளவு பிரகாசமாயிருந்திருக்க வேண்டும்! அவர்கள் ஜனங்களின் மத்தியில் நடந்து சென்றபோது, அவர்களுடய வாழ்க்கை ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாக, “எல்லா மனிதராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிருபங்களாக" இருந்திருக்க வேண்டும். தேவனே, அதை இன்னும் ஒரு விசை அருளுவீராக. 6.கர்த்தாவே, எங்களுடைய ஜீவியங்கள் உமக்கு அர்ப்பணிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர்தாமே எங்கள் மூலம் வாசம் செய்து, எங்கள் மூலம் பேசுவாராக. நாங்கள் வீதியில் நடந்து உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களைப் போல் நாங்கள் இருக்கக்கூடாது என்பதை எங்களுடைய மனதில் நாங்கள் நினைவுபடுத்திக் கொள்வோமாக. கர்த்தாவே, நாங்கள் வழி விலகி, இவ்வுலகில் அவர்களுக்குரிய இடத்தை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். நாங்கள் வேறொரு உலகத்திலிருந்து இங்கு வந்துள்ள பிரதிநிதிகள் என்பதை அறிந்தவர்களாய், நாங்கள் பின்னிடத்தை எடுத்துக் கொள்கிறோம். கர்த்தாவே, அதிகாரத்துக்கு வரவிருக்கும் ஒரு ராஜ்யம் எங்களுக்குள்ளது. எங்கள் மகத்தான ராஜா விரைவில் வந்து, அவருடைய அதிகாரத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் எடுத்துக் கொள்வார். நாங்கள் இந்த பூமியில் இங்கே அவருடன் ஆயிரம்வருடம் ஆளுகை செய்து, அரசாண்டு, அவருடன் சதாகாலங்களிலும் இருப்போம். 7. .கர்த்தாவே, இதை மனதில் கொண்டவர்களாய், எங்கள் ஜெபத்துக்கு பதிலை இப்பொழுது நாங்கள் உம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்கள் எங்களுடைய அறிக்கையின் பேரில்எதிர்நோக்கியிருக்கிறோம். நாங்கள் ஏதாவது செய்திருந்தால், ஏதாவது கூறியிருந்தால் அல்லது எதையாவது நினைத்திருந்தால், உமது மகத்தான சித்தத்துக்கு முரணாக எதையாவது நினைத்திருந்தால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்களை சுத்திகரிக்கட்டும். 8.கர்த்தாவே எங்களை வழி நடத்தும், இன்றிரவு அந்த சகோதரி, அவளும், அவளுடைய கணவனும் சிக்காகோவுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினபடியால், தேவனாகிய கர்த்தாவே, அவர்களை வழிநடத்தி, அவர்களை நீர் உபயோகிக்கச் சித்தமுள்ள இடத்துக்கு கொண்டு சென்று, எங்கள் கர்த்தராகிய இயேசுவை அறியாமல் இருளில் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் வெளிச்சமாக அமைந்திருக்கும்படி செய்வீராக. இப்பொழுது ஆராதனையை நாங்கள் உம்மிடத்தில் ஒப்படைத்து, அந்த மகத்தான நேரத்துக்கென நாங்கள் எப்படி ஆயத்தப்படுவது என்று அறிந்து கொள்ள அந்த திருத்தும் உம்முடைய வார்த்தைக்கு செவிகொடுப்போமாக. இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். [ஒலிநாடாவில் காலியான இடம். சகோதரன் நெவில் விளக்கம் கூறுகிறார்—ஆசி.) கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, உங்களுக்கு நன்றி. 9.நான் சற்று எதிர்பாராதவிதமாகவே வந்துவிட்டேன். நான் வீட்டில் இருந்த காரணத்தால் வர வேண்டுமென்று தோன்றினது. அவசரமாக வெளியே எங்காவது போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலொழிய, ஜெப கூட்டத்துக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் மிக மோசமாக உணருவேன். வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. என் குடும்பத்துக்கும் கூட அது எதிர்பாராததாயிருந்தது. நான் காரில் ஏறிக் கொண்டு, புறப்பட்டுவிட்டேன். எனவே நான், “நான் ஜெபக் கூட்டத்துக்கு போகிறேன்" என்று சொல்லி புறப்பட்டுவிட்டேன்.அவள் வருவதற்கு ஆயத்தப்பட நேரமில்லாமல் போனது, ஏனெனில் நான் இங்கு வரப்போகிறேன் என்று அவளுக்குத் தெரியாது. 10 இந்த சகோதரியின் சாட்சியைக் கேட்டது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அந்த சகோதரன்...தென் கரோலினாவில் கண்ட அந்த ஒளி, இல்லை வடக்கு கரோலினாவில், எங்கோ ஓரிடத்தில், அது கிரீன்வில்லா? [ஒரு சகோதரி, “இல்லை. தென் பைனஸ்” என்கிறாள்.-ஆசி.] தென் பைன்ஸ், ஆம். 11 சகோதரர் லீவேயில் இன்றைக்கு இங்கு வந்திருந்தார். ஞானஸ்நான ஆராதனையில் இன்று அவருக்கு நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். சகோதரர் லீ வேயில் உங்களுக்குத் தெரியும். அங்குள்ள ஊழியக்காரர்களில் ஒருவர் சகோதரன் பார்க்கர் தாமஸ். அங்கே... 12 அந்த சகோதரி நிழலிடப்பட்ட நேரம் என் நினைவுக்கு வருகிறது. சகோதரியே, அது ஒரு பெரிய உறுதிபடுத்துதலாயிருந்தது. பரிசுத்த ஆவியானவர் சில சமயங்களில், நமது விசுவாசத்தை சோதித்து நாம் என்ன செய்கிறோம் என்று காண நம்மை போக அனுமதிக்கிறார்... மற்றவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறார். நீங்கள் நோக்கிப் பார்த்து, ஏதோ ஒன்றைக் கண்டுக் கூறும்போது, மற்றவர்கள் நோக்கிப் பார்த்தும் அதை காணாமல், அவர்கள் அது அங்கில்லை என்கின்றனர். பாருங்கள்? ஆனால் அது அங்குள்ளது. 13 இப்பொழுது, பவுலுக்கு மேலேயிருந்த ஒளியை வேறு யாரும் காண முடியவில்லை. ஆனால் அது அங்கிருந்தது. வானத்திலிருந்து புறாவைப்போல் இறங்கி, ஒளி உருவில் இயேசுவின் மேலிருந்ததை யோவானைத் தவிர வேறு யாரும் காணமுடியவில்லை. ஆனால் அது அங்கிருந்தது. பாருங்கள்? 14 அதற்கு பின்பு நான் ஜனங்களிடம் அக்கினி ஸ்தம்பத்தைப் போலுள்ள இந்த ஒளியைக் குறித்துக் கூறிக்கொண்டிருந்தபோது, அதை யாருமே நம்ப விரும்பவில்லை. ஆனால் புகைப்படக் கருவியின் இயந்திரக் கண் அதை அடையாளங்கண்டு கொண்டது, அது எப்படி உண்டானது. பொல்லாத ஆவி கறுப்பாயிருக்கிறது. 15. அது நம்முடைய ஜீவியங்களைப்போலுள்ளது, நாம் நிழல்களாயிருக்கிறோம். நாம்...நாம் ஒளியாயிருந்தால், நம்முடைய வாழ்க்கை இந்நாளின் ஒளியுடன் ஒத்துப் போனால், நாம் ஒளியில் நடந்து கொண்டிருக்கிறோம். 16. அது நீங்கள் பகல் நேரத்தில் வெளியே எட்டி பார்த்து “நான் சூரியனைக் காண்கிறேன்” என்று சொல்வது போன்றுள்ளது. நீங்கள்—நீங்கள் சூரியனின் நிழலைத்தான் காண்கிறீர்கள். அது சூரியனின் பிரதிபலிப்பே அல்லாமல் அது சூரியன் அல்ல. ஆனால் ஒரு சூரியன் உள்ளது என்பதை அது நிரூபிக்கிறது. அது ஒரு சூரியன் உள்ளதை நிரூபிக்கிறது. 17. நீங்கள் உட்கார்ந்து கொண்டு, விசிறியை உபயோகித்து விசிறிக் கொண்டு, யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பதை நான் காணும் போது நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்று அது அர்த்தமாகிறது. ஆனால் அது ஜீவனின் நிழல் மாத்திரமே. 18. காரணம், எந்தக் காரியத்திற்கு ஒரு நிழலை உண்டாக்க, அதற்கு இருள் இருக்க வேண்டும். புரிகிறதா? காரணம், நிழலுக்கு இவ்வளவு இருள், இவ்வளவு வெளிச்சம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிழல் உண்டாகும். அது முழுவதும் இருளாயிருக்காது, அது முழுவதும் வெளிச்சமாயிருக்காது. அது இருளாயிருந்தால் அது உண்மையில் இருளாகிவிடுகிறது. அது வெளிச்சமாயிருந்தால், நிழலாயிருக்காது. நிழல் உண்டாக அங்கு ஒன்றும் இருக்காது. ஆனால் இருளும் வெளிச்சமும் கலந்தால், அது நிழலை உண்டாக்குகிறது. 19. ஆகவே நாம் உண்மையில் வெளிச்சத்தின் நிழலாயிருக்கிறோம். இப்பொழுது நீங்கள் எங்கோ உள்ள ஒளியை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவராயிருந்ததால், இது ஒரு நிழலாயிருக்குமானால், எங்கோ நீங்கள் மரிக்க முடியாத ஒரு வாழ்க்கை உள்ளதை அது நிரூபிக்கிறது. ஏனெனில் இந்த வாழ்க்கை மரணத்தைக் கொண்டுள்ளது. புரிகிறதா? ஆனால் அது ஒரு நிழல், ஏனெனில் நீங்கள் உயிர் வாழ்ந்து நடமாடி, பார்த்தல், சிந்தித்தல், அசைதல், பேசுதல் போன்ற சரீரத்தின் ஐம்புலன்களைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் அதே சமயத்தில், அவர்கள், அவர்கள் மரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதிகமான தொல்லை உள்ளது. அது ஒரு பிரதிபலித்தலாய் மாத்திரமே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், பாருங்கள். அதில் ஜீவனும் மரணமும் கலந்துள்ளது. 20. சரீரம் மரிக்க வேண்டும். ஆனால் மரிக்க வேண்டிய உங்கள் வாழ்க்கை பரலோக ஒளியை பிரதிபலித்துக்கொண்டிருக்குமானால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய நித்திய ஜீவனைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மரிக்கும்போது, நீங்கள் அந்த ஒளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் அதைத்தான் நீங்கள் பிரதிபலித்துள்ளீர்கள். 21. நீங்கள் இருளின் உலகில் இருந்து கொண்டு, நீங்கள் அதை பிரதிபலிக்கிறீர்கள், நீங்கள் அதைத்தான் பிரதிபலிக்க முடியும், இருளண்டைக்குத் தவிர வேறு எங்கும் செல்ல வழியேயில்லை. பாருங்கள், எனவே நாம் ஒரு பிரதிபலிப்பில் இருக்கிறோம். எனவே, பரிசுத்த ஆவி ஒளியையும் ஜீவனையும் பிரதிபலிப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக மரணம் இருளைப் பிரதிபலிக்கிறது என்பதை நாம் காண்கிறோம். 22 இங்கே அவை இரண்டும் உள்ளன. நாளை... இந்தவார முடிவில், ஒருக்கால் ஞாயிறன்று, சிறியப் புகைப்படத்தை பெரிதாக்கி அதை உங்கள் படம் தொங்கவிட்டிருக்கும் அறிவிப்புப் பலகையில் தொங்கவிட உத்தேசித்துள்ளோம். 23. அங்கே அந்த அறிவிப்புப் பலகையில் அந்த சிறு புகைப்படம் தொங்குகிறது. நீங்கள் அதை கவனித்தீர்களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அதன்பின்னர்... ஒரு வாரத்துக்கு முன்பு, நான் ஊழியம் செய்த ஜமாய்காவில், ... ஒலி நாடாக்களை அனுப்பினோம். நாங்கள் ஒலி நாடாக்களை உலகம் முழுவதும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஏழு முத்திரைகள் செய்தியைக் கொண்ட ஒலிநாடாக்கள் ஜமாய்காவின் உட்பிரதேசங்களை, மிகவும் உள்ளில் உள்ள பகுதியில் சென்றடைந்துள்ளன. அந்த புளூ மவுண்ட் என்ற மலைகளின் பின்புறம் குடியிருப்பவர்களோ பழங்குடியினர் ஆவர். அவர்களிடம் ஒரு -ஒரு பழைய ஒலிப்பகுதி கருவி உள்ளது. அதை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்தோம். அது பழைய விக்ட்ரோலோ ஒலிப்பதிவுக்கருவி போன்ற ஒன்று. அதை அடிக்கடி இயக்கிவிட வேண்டும். அதன்பின்னர் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அது நின்று விடும். அதை மறுபடியும் யாராவது இயக்கிவிட வேண்டும். 24 இந்த சிறு குழுவினிடம் ஆறு மின் அலகு கொண்ட ஒரு-ஒரு மின்கலத்தால் அல்லது அதுபோன்ற ஒன்றினால் இயங்கும் ஒலிப்பதிவு கருவி இருந்தது. அவர்கள்—அவர்கள் ஒன்றாக அமர்ந்து, இன்றிரவு இங்குள்ளவர்களின் எண்ணிக்கை அளவிற்கு, முத்திரைகளின் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த செய்திதான் என்று நினைக்கிறேன். நான் ஒலிநாடாவில் பேசிக்கொண்டிருந்த போது, அதே அக்கினிஸ்தம்பம் அறைக்குள் வருவதை அவர்கள் கவனித்தனர்...அது ஒலிப்பதிவுக்கருவி வைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்து அதன் மேல் நின்றது. அவர்கள் புறப்பட்டுப்போய் புகைப்படக்கருவியைக் கொண்டு வந்து அதைப் புகைப்படம் எடுத்தனர். அதே படம் தான், அங்கே அந்த படம் தான் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் நன்றாக காண்பதற்கென அதை பெரிதாக்கி அறிவிப்பு பலகையில் தொங்கவிடப்போகிறோம். 25. இந்நாளில் அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக நம்மைக் கொண்டு வந்துள்ள தேவனுடைய கிருபைக்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது நாம் அநேக காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 26. நான் ஏற்கெனவே பிரசங்கித்ததின் பேரில் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஏதாவது இங்கு இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று நான் இப்பொழுது நினைக்கிறேன். இல்லையென்றால் ஒரு-ஒரு விதமான...இங்கு ஒரு புத்தகத்தில் அநேக நாட்களுக்கு முன்பு நான் எழுதி வைத்த பிரசங்க பாடப் பொருளைப் பற்றிய குறிப்பு உள்ளன. எனக்கு ஒன்று கிடைத்தால் நாம் ஜெபிக்கும்போது, அதன் பேரில் ஏதாவதொன்றை நான் பேச கர்த்தர் அருளுவார். இப்பொழுது, ஞாயிற்றுக் கிழமைக்காக நாம் அதிக எதிர்நோக்குதலுடன் காத்திருக்கிறோம். 27. நான் செய்திகளை அளித்து வருகிறேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை “நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டு போங்கள் என்று ஜனங்களுக்குச் சொல்” என்னும் செய்தியின் பேரில் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன். 28 . வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். அப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்படும். நீங்கள் வியாதியஸ்தரை அணுகி, நீங்கள் அவர்களுக்கு ஜெபம் செய்தும், அவர்கள் குணமாகவில்லை என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கூட ஒரு சிறு பிரசங்கம் செய்யவிரும்புகிறேன். பின்னர் நான் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தி, வியாதியஸ்தர் அனைவருக்காகவும் ஜெபிக்கப் போகிறேன். பில்லிபால் அல்லது வேறு யாராவது வந்து ஞாயிறு காலை கிட்டத்தட்ட எட்டு மணிக்கு இங்கே சபை திறக்கப்படும்போது, உள்ளே வருபவர்களுக்கு ஜெப் அட்டையை விநியோகிப்பார்கள் அல்லது அவர்கள் எப்பொழுது உள்ளே வந்தாலும் விநியோகிப்பார்கள். 29. இப்பொழுது,...நான் இதைக் கூற முயற்சிக்கிறேன், சிலர் ஏன் குணமாக்கப்படுகிறதில்லை என்பதைக் குறித்து கர்த்தர் எனக்கு எப்படியோ சிறிது ஆழ்ந்த அறிவைத் தந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அது புரிந்து கொள்ள இயலாமை என்று நான்— நான் கருதுகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், அதைக் குறித்து நாம் ஞாயிறன்று பேசுவோம் என்று நான்—நான் நினைக்கிறேன். 30. புதன் கிழமை இரவு ஜெபக்கூட்டம் ஒரு சுருக்கமான கூட்டம், இங்கு நாம் அப்பொழுது ஒன்று கூடி ஜெபித்து ஒன்றாக தொடர்பு கொள்கிறோம். 31. சில நேரங்களில், நாம் விசுவாசிப்பதில் நமக்குள்ள உத்தம குறைவே இந்த நாளில் நான் கண்டறிகிற பெரிய தவறான காரியங்களில் ஒன்று என்று நான்—நான் கருதுகிறேன். புரிகிறதா? பார்த்தீர்களா? இந்நாளில் தேவன் செய்து வருவதை வெஸ்லியின் நாட்களில் செய்திருந்தால், அது அவர்களுக்கு என்ன செய்திருக்கும்? மார்டின் லூத்தரின் காலத்தில் அல்லது வேறெந்த காலத்தில் செய்திருந்தால், அது என்ன செய்திருக்கும்? இன்று நாம் காண அவர் செய்யும் கிரியைகள் செய்யப்பட்டிருந்தால், அது சபையினாலும், ஆவியினாலும் விஞ்ஞானத்தினாலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது... அது தொடர்ச்சியாக சென்று கொண்டேயிருக்கிறது. அதை நாம் அடையாளம் கண்டு கொள்ளத்தான் வேண்டும், ஒன்று நிறைவேறுதற்கு முன்பு தேவனுடைய வார்த்தை இங்கே பிரகடனம் செய்து அதை முன்னுரைக்கிறது. இவ்விதமாய் தொடர்ச்சியாக நடந்து தீர்க்கதரிசனம் உரைத்து, அவர் கூறியுள்ளது அப்படியே நிறைவேறி வருகிறது என்பதைக் காண்பிக்கிறது. அதே சமயத்தில் நமக்கு இன்னும் சந்தேகம் உள்ளதுபோல் அதைக் குறித்து சிரத்தையற்றவர்களாய் இருக்கிறோம்..."ஒருகால் அது என்னைக் குறிக்கிறதா? அல்லது சபை முழுவதையும் குறிக்கிறதா? அல்லது— அல்லது அதில் நான் உண்மையாக சேர்க்கப்பட்டிருக்கின்றேனா?" என்று வியக்கிறோம். ஞாயிறன்று காலை நமக்கு சிறிது உற்சாகம் மூட்டும் சில கொள்கைகளைக் குறித்து பேசலாம் என்றிருக்கிறேன். 32. இன்றிரவு இந்த ஒன்றை நான் கண்டு, அதில் என் கவனத்தை செலுத்தினேன். இங்கு நான் வருவதற்கு முன்பு, "சகோ.நெவில் என்னைக் கண்டவுடன், ‘நீங்கள் பேசுங்கள்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டால் என்ன செய்வது?” என்று எண்ணினேன். புரிகிறதா? எனவே நான், “ஒரு சில வேதவாக்கியங்களை நான் எழுதி வைத்துக் கொள்வது நல்லது” என்று கருதினேன். காரணம், அவர், அவர் மிகவும் ஒரு அருமையான சகோதரன் என்பதை நான் அறிவேன். அவரை நாம்—நாம் பாராட்டுகிறோம். 33. வார்த்தையின் பேரில் நாம் ஜெபிப்பதற்கு முன்பு, ஒரு-ஒரு சகோதரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன். அவருடைய பெயர் எனக்கு இந்நேரத்தில் மறந்துவிட்டது. அவர்கள் இரண்டு பேர். அவர்கள் எனக்கு அருமையான நண்பர்கள். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஊழியச்செய்கிற ஊழியர்களாய், சுவிசேஷர்களாய் இருக்கின்றனர். அவர்கள் இந்த செய்திகளை ஒலிநாடாக்களில் கேட்டனர். அதன்பின்னர் அவர்கள் வெவ்வேறு ஸ்தாபன சபைகளை விட்டு வெளிவந்தனர். இரு இளைஞர்கள். ஒருவர் மிகவும் சிரத்தை கொண்டு, அண்மையில் கூட்டம் முடிவுபெறும் தருணத்தில் விமானம் மூலம் டூசானை வந்தடைந்தார். அப்பொழுது நான் வர்த்தரின் காலை உணவு கூட்டத்தில் இருந்தேன் என்று நான் நினைக்கிறேன். இந்த இளைஞர் மிகவும் அருமையான இளைஞன். அங்கு வந்தடைந்தார். அவர்... 34. இவர்கள் கான்சாஸ் நகரத்தை சேர்ந்தவர்கள். நான் அவர்கள் விவாகத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தொலைதூரத்திலிருந்து வந்துள்ளனர். அதை நான் மெச்சுகிறேன். தேவன் என் ஜெபத்தைக் கேட்டு அதற்கு உத்தரவு அருளுகிறார் என்னும் விசுவாசத்தை ஜனங்கள் போதிய அளவு பெற்றுள்ளதற்காக, இல்வாழ்க்கையை இவ்வாறு தொடங்கவிருக்கும் இந்த இளைஞர்கள். அவர்களுக்கு நான் விவாகம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் நேற்று வந்தபோது, அவர்களுக்கு இரத்தப்பரிசோதனை செய்யப்பட்டிருந்தபோதிலும், இந்தியானா நாட்டு சட்டத்தின்படி, அவர்கள் விவாகமாவதற்கு முன்பு மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டனர். எனவே வெள்ளி காலை வரைக்கும் அவர்கள் விவாகம் செய்து கொள்ள முடியாது. 35. அங்கு முலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சகோதரன் எழுந்து நின்று, அவர் யாரென்றும், அவருக்கு பக்கத்திலுள்ள அவருடைய அழகிய பெண்ணும், அதற்கு பக்கத்திலுள்ள சகோதரனும், யார் என்பதை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். 36. (அந்த சகோதரன், "சகோதரன் பிரான்ஹாம் உங்களுக்கு நன்றி. இங்கு இருக்கும்படியான சிலாக்கியம் பெற்றேன். நான் சகோதரன் ரோஜர் ஒ நீல், கான்சாஸில் வசிக்கிறேன். ஒரு சுவிசேஷனாக ‘இயேசு இரட்சிகிறார். சுகமாக்குகிறார், இயேசுவில் உள்ள விசுவாசத்தினால்...?...' என்று கூறி ஊழியர்களத்தில் பயணிக்கிறேன். நான் எப்பொழுது...கூறிவருகிறேன். இது என்னுடைய வருங்கால மனைவி பேட்ரிசியா பெளரவுன், நாங்கள் வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொள்ள போகிறோம். இது என்னுடைய சகசுவிசேஷகன் மற்றும் சக ஊழியர் சகோதரன் ரோனி ஹண்ட், இங்கே கடைசியில் அமர்ந்துள்ளார். இது அவருடைய வருங்கால மனைவி கேரல்...?...இன்றிரவு இங்கே நாங்கள் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறோம்."-ஆசி.) 37 . உங்களுக்கு மிக்க நன்றி. கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தில் உள்ள இளம் பிரதிநிதிகளை நாங்கள் நிச்சயமாகவே வாழ்த்தி, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் துரிதமாய் பொழிய வாழ்த்துகிறோம். கர்த்தர் எப்பொழுது வருவாரென்று வியந்து அவருடைய வருகைக்காக நான் காத்திருக்கும் நேரத்தில், இளைஞர்களும் இளம் பெண்களும் கிறிஸ்துவை சேவிக்க வேண்டும் என்னும் நோக்கத்தை தங்கள் இருதயத்தில் கொண்டவர்களாய் இப்படி எழும்புவதைக் காணும்போது, அது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. என் சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உங்களை அபரிதமாக ஆசீர்வதிப்பாராக. 38. என் வாழ்க்கையில் நான் இதுவரைக்கும் பிரசங்கம் செய்யாத சிறு நிரூபத்தன்டை நாம் இப்பொழுது திருப்புவோமாக. அது... ஒரே ஒரு அதிகாரமாயுள்ள பிலேமோனுக்கு எழுதிய நிரூபம். அது ஒரு... 39. என் உச்சரிப்பு சிறிது அயர்லாந்து நாட்டினரின் உச்சரிப்பு. அது மட்டுமல்ல, என்னுடைய இரண்டு கீழ்பற்கள் கம்பியைக் கொண்டு கட்டப்பட்டு அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே நான், நான் சில நேரங்களில் இந்த பெயர்கள் எப்படி உச்சரிக்கப்பட வேண்டுமென்று நான் அறிந்திருந்தும் கூட, என்னால் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. சில நேரங்களில் கல்விக் குறைவின் காரணமாக அவைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனவே “பிலேமோன்” என்று பின்னால் உள்ள யாரோ ஒருவர் கூறினார். அது தான் உண்மையிலே சரியான உச்சரிப்பாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 40. இப்பொழுது, 1-ம் வசனம், நான் அந்த வசனத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை பேச எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்க பவுல்... 41. கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு கட்டப்பட்ட ஒருவன் என்பதை தான் நான் பிரசங்கத்தின் பொருளாக உபயோகிக்க விரும்புகிறேன். 42. பவுல் தன்னைக் கட்டப்பட்ட ஒருவனாகக் கருதுகிறான் என்று நீங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. அவன் சுயாதீனமாகப் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவன். ஆனால் அதே சமயத்தில் அவன் தன்னைக் “கட்டப்பட்ட ஒருவன்” என்று அழைத்துக் கொள்கிறான். 43. அவன் கொரிந்தியருக்கு நிரூபத்தை எழுதினபோது, “இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்" என்று எழுதுகிறான் என்றும், மற்றொரு சமயம், தீமோத்தேயுவுக்கும், மற்றவர்களுக்கும் எழுதும்போது, “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பவுல்” என்று எழுதியுள்ளதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். இப்பொழுது இங்கே பிலேமோனுக்கு எழுதும் போது, அவன் "கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாகிய பவுல்” “அப்போஸ்தலனாகிய பவுல்” என்றும் கூறியுள்ளான். நான் அதன் பேரில் ஒரு இரவு பிரசங்கிக்க விரும்புகிறேன். "பவுல், ஒரு ஒரு ஊழியக்காரன்,” என்பதன் பேரிலும், அதன்பின்னர் “பவுல் கட்டப்பட்ட ஒருவன்” என்பதன் பேரிலும் பிரசங்கிப்பேன். 44. ஆனால் இன்றிரவு இந்தப் பாடத் தலைப்புகளில் ஒன்று முறைப்படி ஆய்ந்துப் பார்க்க பல மணி நேரங்கள் ஆகிவிடும். எனவே நான் இன்றிரவு “கட்டப்பட்டவனாகிய பவுல்” என்பதை எடுத்துக்கொண்டு, கட்டப்பட்ட ஒருவன் என்ற பாடப் பொருளில் பேச விரும்புகிறேன். இப்பொழுது சற்று நேரம் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 45. கர்த்தராகிய இயேசுவே, சரீர பெலன் உள்ள எவரும் இந்த வேதாகமத்தின் பக்கங்களைப் புரட்ட முடியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே அதன் உண்மையான அர்த்தத்தை எங்களுக்கு விளக்கிக் காண்பிக்க முடியும். இந்த மகத்தான தீர்க்கதரிசியான பவுல் தன்னை ஏன் “கட்டப்பட்ட ஒருவனாக” அழைத்துக் கொண்டான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள நீர் வந்து எங்களுக்கு உதவி செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அவர் பேரில் நாங்கள் காத்திருக்கும் இந்நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தாமே இதை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 46. இந்த நிரூபத்தை பவுல் பிலேமோனுக்கு எழுதினபோது, அவன் அந்த நகரத்தின் சிறைக்குள் இருட்டறையில் ஒரு ஒரு ஒரு சிறைவாசியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை இப்பொழுது என்னால் கற்பனை செய்ய முடிகிறது...அவன் இருந்த நிலைமையிலிருந்து அந்த வார்த்தை என்ன பொருட்படுத்தினது என்பதை அவன் நன்கு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அவன் இரும்புக் கம்பிகளால் சூழப்பட்டிருந்தான். எவராகிலும் அவனை விடுதலையாக்கினாலொழிய அவன் விடுதலையடைய முடியாது. ஒரு சிறைவாசியாயிருப்பது எப்படிப்பட்டது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த அப்போஸ்தலன் சிறிது...தன் உடல் சிறையில் அடைப்பட்டிருந்து இங்கே இந்த சிறையில் அமர்ந்திருக்கிற அந்த நிலையைக் குறிப்பிடவில்லையென்று நான் எண்ணுகிறேன். ஆனால் அவனுடைய—அவனுடைய சரீரமில்லாமல், அவனுடைய—அவனுடைய ஆவி, மனம் இவைகள் இயேசுகிறிஸ்துவினால் கட்டப்பட்டிருந்ததையே அவன் குறிப்பிட்டிக்கொண்டிருந்தான் என்றே நான் கருதுகிறேன். 47. நாம் அனைவரும் நமது விருப்பப்படி எந்த தீர்மானத்தையும் செய்ய ஒரு சுயாதீனராக பிறந்துள்ளோம். தேவன் நீதியின்படி அதை செய்கிறார். ஏனெனில் அவர் ஒவ்வொருவரையும் அதே அடிப்படையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் முதலாவது மனிதனுக்கு சுயாதீனம் அளித்தபோது, அவர் தவறான அடிப்படையை கடைபிடித்ததாக ஆகிவிடும். புரிகிறதா? இன்றிரவு நாம் ஆதாம் ஏவாள் வைக்கப்பட்டிருந்த அதே அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு வித்தியாசமும் இல்லை. நமது ஒவ்வொருவர் முன்னிலையிலும் நன்மையும் தீமையும்—ஜீவனும் மரணமும் வைக்கப்பட்டுள்ளது. நாம் நம்முடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்யலாம். அதைச் செய்வது உங்களைப் பொறுத்தது. புரிகிறதா? 48. ஆதாமும் ஏவாளும் அதைத்தான் செய்தனர். ஆனால் பாருங்கள். அவர்கள் தவறானதை தெரிந்து கொண்டனர். அதன் விளைவாக மனித குலம் முழுவதுமே மரண ஆக்கினைகுட்பட்டது. 49. அதன்பிறகு தேவன் மனித உருவில் இறங்கி வந்து, மரணத்தை ஏற்று, மரணத்துக்கான கிரயத்தை செலுத்தி, மரணத்துக்கு கீழ்பட்டிருந்த தம்முடைய பிரஜைகளை, அதிலிருந்து விடுதலையாக விரும்பினவர்களை விடுதலையாகும்படி செய்தார். 50. அவர் ஆதாமையும் ஏவாளையும் கொண்டு சென்று, "நீங்கள் இரட்சிக்கப்பட விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களை நான் இரட்சிப்பேன்" என்று கூறியிருந்தால், அப்பொழுது அவர் ஆதாமையும், ஏவாளையும் தவறான அடிப்படையில் வைத்தவராகி விடுவார். நீங்கள் பாருங்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் ஜீவன், மரணம் இவைகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் அதைச் செய்ய முடியும். 51. நான் சற்று முன்பு வெளிப்படுத்திக் கூறினது போல, உங்களுடைய வெளிச்சம் நிரூபிக்கும், நீங்கள் சரியாக எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய வாழ்க்கை நிரூபிக்கும். நீங்கள் எந்த பக்கத்தில் இருப்பதாக உரிமை கோரினாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒவ்வொரு நாளும் புரியும் செயல்கள் நீங்கள் யாரென்பதை நிரூபிக்கிறது. “உங்கள் வாழ்க்கை உரக்க சத்தமிடுவதால், உங்கள் சாட்சியை என்னால் கேட்க முடியவில்லை” என்னும் பழைய பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். புரிகிறதா? உங்கள்—உங்கள் செயல்கள் அதிக சத்தமாயுள்ளன. 52. நான் கூச்சலிடுவதிலும் குதிப்பதிலும் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டவன். ஆனால் "நீங்கள் வாழும் நிலைமையை காட்டிலும் அதிக உயரம் குதிக்க வேண்டாம். ஏனெனில் உலகம் அதைக் கவனித்துக் கொண்டிருக்கும்" என்று நான் எப்பொழுதும் கூறுவதுண்டு. உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் வாழும் நிலைமையின் மட்டத்துக்கு தான் நீங்கள் குதிக்க வேண்டும், ஏனெனில் யாராவது ஒருவர் உங்களை கவனித்துக் கொண்டிருப்பார். இப்பொழுது... 53. ஜனங்கள் சபைக்கு வரமாட்டார்கள். அவர்கள்—அவர்கள், அவர்களில் அநேகர் அதைச் செய்யமாட்டார்கள். அவ்விதம் வராதவர்களில் அநேகர் உண்மையானவர்கள். சபையில் அவர்கள் அதிக சீர்கேட்டைக் காண்பதால் அதனோடு அவர்கள் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. நாம் அதைக் குறித்து அநேக முறை பேசியிருக்கிறோம்; நீங்கள் அவர்களைப் பழிக்க முடியாது, பாருங்கள், ஏனென்றால் ஜனங்கள் அந்தவிதமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். உலகம் பெற்றுள்ள மிகப் பெரிய முட்டுகட்டைகளாய் அவர்கள் இருக்கிறார்கள். மனிதரும் ஸ்திரீகளும் தங்களைக் கிறிஸ்தவர் என்றழைத்துக் கொண்டு, அதற்கு மாறாக ஜீவிக்கும் மக்கள். அது முற்றிலும் சரி. 54. இப்பொழுது, நியாயத்தீர்ப்பு நாளில் ஏமாற்றங்கள் உண்டாகும். "என்றென்றைக்குமான அக்கினிக்குள் போகும்படியான நியாயத்தீர்ப்பு வாசிக்கப்படுகையில்,” பாவியோ, கள்ளச்சாராயக்காரரோ, சூதாடுபவரோ, விபச்சாரரோ, அவர்கள்- அவர்கள் ஏமாற்றமடையமாட்டார்கள். அப்படிப்பட்டவன் ஏமாற்றமடையமாட்டான். ஆனால் எவனொருவன் ஒரு சபையின் பின் ஒளிந்துக் கொண்டு, தன்னைக் கிறிஸ்தவன் என்று பாசாங்கு செய்கிறானோ அவன் மட்டுமே நியாயத்தீர்ப்பின் நாளிலே ஏமாற்றமடையப் போகிறான். புரிகிறதா? அவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லியும், வேறு வழியில் ஜீவிக்கிறான். அவன் இவ்வாறு பாசாங்கு செய்து ஜிவிப்பதைக் காட்டிலும் அவன் அதைத் துவங்காமலிருந்தால் அதுவே அவனுக்கு மேலானதாகயிருந்திருக்கும். காரணம் தான்—தான் கிறிஸ்தவன் என்று கூறி வேறு வழியில் ஜீவிப்பவனே, நாம் பெற்றுள்ள மகா பெரிய இடையூறாயிருக்கிறான். 55. உனக்கு அற்புதங்கள் செய்ய எவ்வளவு வல்லமையுள்ளது என்ற அளவைக் கொண்டு முடிவு செய்யாதே, வார்த்தையிலுள்ள நம் அறிவின் அளவைக் கொண்டு நாம் நம்மை மதிப்பிடுவதில்லை. ஆனால் எப்பொழுதுமே நீயே உன்னை மதிப்பீட்டுப் பார். நீ இப்பொழுது ஜீவிக்கிறதில் எவ்விதமான ஜீவிய கனியைத் தருகின்றாய் என்பதைக் கணக்கெடுத்துப் பார். புரிகிறதா? 56. நான் சிறிது காலத்திற்கு முன்பு அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ்ஸில் வர்த்தகப் புருஷனுடைய கூட்டத்தில் பேசியதைப் போன்று, இயேசுவின் பிரதிபலிப்பை பிரதிபலிப்பதே கிறிஸ்தவனின் ஜீவியமாகும். நான் கென்டக்கியில் பிறந்தேன் என்று கூறியுள்ளேன். அது மிகவும் நாகரீக முதிர்சியற்ற இடமாகும். நான் சிறுவனாயிருந்தபோது, நான் குறிப்பிட்டிருந்த அந்த சிறுவனுக்கு நம்மைப் போன்ற ஒரு ஒரு ஒரு ஒரு வசிக்கும் வீடு கிடையாது. இன்றைக்குள்ள வீடுகளில், அந்த வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு, அழகுள்ள ஸ்திரீகள் தங்கள் தலைமுடியை அழகுப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அங்கே ஒரே ஒரு சிறிய கண்ணாடி வெளியே மரத்தில் ஆணியடித்து தொங்கவிடப்பட்டிருந்தது. அங்கே முகம் கழுவ ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே தான் அவனுடைய தாயும் தகப்பனும் முகம் கழுவி, அந்த மரத்தில் ஆணியடிக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த சிறு கண்ணாடியில் தங்கள் தலைமுடியைச் சீவிக் கொள்வார்கள். 57. வெளிப்படையாகக் கூறினால், அப்படிப்பட்ட வீடுதான் எங்களுக்கும் இருந்தது. நாங்கள் எவரேனும் நிலைக்கண்ணாடியில் காண வேண்டுமென்றால், சிறு பிள்ளைகளாகிய நாங்கள் ஒரு பெட்டியைப் போட்டு முகம் கழுவும் இடத்திலிருந்து பலகையின் மேலேறி பார்க்க வேண்டும். அது குப்பையிலிருந்து நான் பொறுக்கின ஒரு உடைந்த நிலைக்கண்ணாடி. அது கென்டக்கியில் அல்ல. அது இங்கே நாங்கள் தங்கியிருந்த இந்தியானாவிலுள்ள ஊடிகா பைக் என்னுமிடத்தில், அவ்வாறு இருந்தது. 58. இந்த சிறுவன் தன் உருவத்தை சரியாக நிலைக் கண்ணாடியில் கண்டதில்லை. அவன் தன் பாட்டியைக் காண நகருக்கு வந்திருந்தான். பாட்டியின் வீட்டிலிருந்த ஒரு அறையில் ஒரு முழு நிலைக் கண்ணாடி கதவில் இணைக்கப்பட்டிருந்தது. சிறுவன் அறைக்குள் ஓடினபோது, அவனுக்கு முன்னால் மற்றொரு சிறு பையனைக் கண்டான். அவனுக்கு முன்னால் வேறொரு சிறுவன் அவனைப் போலவே ஓடுவதைக் கண்டான்! இவன் சற்றுநேரம் நின்றால் அந்த பையன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என்று நினைத்தான். இவன் நின்றபோது அவனும் நின்றான். இவன் தன்னுடைய தலையைத் திருப்பினபோது, அவனும் தன்னுடைய தலையைத் திருப்பினான். இவன் தன்னுடைய தலையை சொறிந்தபோது, அவனும் தன்னுடைய தலையை சொறிந்தான். முடிவில், இது என்னவென்று கண்டுபிடிக்க அவன் அருகில் சென்றான். அவன் சுற்றித் திரும்பினான். அவனுடைய தாயும் பாட்டியும் அவனை அதிசயத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். “அம்மா, அது நான்” என்றான். 59. ஆகவே "நாமும் கூட ஏதோ ஒன்றைப் பிரதிபலிக்கிறோம்” என்று நான் அந்தக் கூட்டத்தில் கூறினேன். புரிகிறதா? நமது வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. 60. நாம் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், யார் பக்கம் இருந்திருப்போம்? நோவா வாழ்ந்த அந்த மகத்தான நாட்களில், நாம் எந்த பக்கம் சேர்ந்திருப்போம்? மோசேயின் நாட்களில், நாம் எந்த பக்கம் சேர்ந்திருப்போம்? தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களில், உலகமே நவீனத்தில் விழுங்கப்பட்டு நவீன யேசபேலைப் போல், தேவனுடைய உண்மையான ஊழியக்காரரை உலகப் பிரகாரமான வழிக்குள்ளாக அனுப்பி சபையும் ஆசாரியர்களும் யேசபேலுக்கு தலைவணங்கியிருந்த காலத்தில் நீங்கள் எந்த பக்கம் இருந்திருப்பீர்கள்? புகழின் பக்கத்தில் சேர்ந்திருப்பீர்களா? அல்லது எலியாவுடன் நின்றிருப்பீர்களா? 61. கர்த்தராகிய இயேசுவின் நாட்களில், அவர் ஜனங்களால் வெறுக்கப்பட்டவராயிருந்தார் என்பதை நாம் எண்ணிப்பார்க்கும்போது! அவர் உலகில் கல்வி கற்கவில்லை, அவர் எந்த பள்ளிக்கும் செல்லவில்லை. எந்த வேதாகமக் கருத்தரங்கு அனுபவமும் அவருக்குக் கிடையாது. “முறைதவறிப் பிறந்தவர்” என்னும் பெயருடன் அவர் வளர்ந்து வந்தார். அதன்பிறகு அவர்கள் போதிக்கப்பட்டவைகளுக்கு மாறான ஒரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவர் போதகர்களையும் அவர்களுடைய ஸ்தாபனங்களையும் குற்றப்படுத்தினார். 62. தீர்க்கதரிசி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க செல்பவர் எவரும் ஜெப ஆலயத்திலிருந்து புறம்பே தள்ளப்படுவார்கள் என்னும் ஒரு அறிக்கையை ஸ்தாபனங்கள் விடுத்தன. அது மரணத்துக்கேதுவான பாவமாக கருதப்பட்டது. அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டியவர்களாயிருந்தனர். அவர்கள் ஆராதனை செய்யக் கூடிய ஒரு வழி ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழ் மாத்திரமேயிருந்தது. அவர்கள் இந்த பலியினிடத்திற்கு வர வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவர்கள் புறம்பே தள்ளப்படுவது எவ்வளவு பயங்கரமான காரியமாயிருந்தது. 63 ஆனால் இந்த மனிதன் இதையெல்லாம் அசட்டை செய்தார். அதே சமயத்தில் அவர் வார்த்தையோடு பரிபூரணமாக நிலைத்திருந்தார். ஆயினும் அவர்கள் அதை அறிந்திருந்த முறையில் அல்ல. அப்பொழுது நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்தீருப்பீர்கள். புரிகிறதா? இப்பொழுது.. இப்பொழுது வாழ்கின்ற உங்களுடைய வாழ்க்கை, அப்பொழுது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை பிரதிபலிக்கிறது. ஏனெனில் இப்பொழுது நீங்கள் அதே ஆவியால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். புரிகிறதா? இப்பொழுது யார் பக்கத்தில் இருக்கிறீர்களோ, அதே பக்கத்தில் அப்பொழுதும் இருந்திருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது உங்களுக்குள் இருக்கும் அதே ஆவிதான் அப்பொழுது அந்த ஜனங்களுக்குள்ளும் இருந்தது. புரிகிறதா? 64. பிசாசு தன் ஆவியை எடுத்துக்கொள்வதில்லை. அவன் ஒரு மனிதனிலிருந்து வேறொரு மனிதனுக்குள் செல்கிறான். 65. தேவனும் தமது ஆவியை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு மனிதனிலிருந்து வேறொரு மனிதனுக்குள் செல்கிறது. புரிகிறதா? 66. .எனவே எலியாவின் மேலிருந்த அதே ஆவி எலிசாவின் மேல் வந்தது. அது யோவான் ஸ்நானனின் மேல் வந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. 67. கிறிஸ்துவின் மேலிருந்த பரிசுத்த ஆவி சீஷர்களின் மேல் வந்து, இப்படி வழிவழியாக, இப்பொழுதும் ஜனங்களின் மேல் தங்கியுள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தமது ஆவியை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நாம் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்யும்படி விடப்பட்டிருக்கிறோம். 68. பவுல் ஒரு சிறைவாசியாயிருந்தான் என்பதைக் குறித்து வருத்தமடைந்தவனாய், அவன் அவ்வாறு இருப்பதைக் குறித்து வருந்துகிறேன் என்று சொன்னதாக என்னால் என்னால் காண முடியவில்லை. ஆனால் அவன் தன்னைக் குறித்த நிலையைக் குறிப்பிடும்போது...பவுல் இந்த நிரூபத்தை அந்த எழுதுகோலினால் எழுதினபோது, பரிசுத்த ஆவியானவரே அவன் அப்படி எழுதும்படி செய்தார் என்று நான் நினைக்கிறேன். அதன் விளைவாக இன்றிரவு வரைக்கும் அந்த பொருளை நாம் தெரிந்து கொண்டு பவுல் ஏன் அப்படி எழுதினான் என்பதைக் காண்பிக்க முடிகிறது. ஏனெனில் அது வேதபூர்வமானது. வேதபூர்வமான எதுவும் நித்தியமானது. இந்த பழைய சிறையின் இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு அவன் "இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டவன்” என்று தன் சக ஊழியகாரரான சகோதரனுக்கு எழுதினான் என்று நான் நினைக்கிறேன். எனவே அவனை சுற்றிலுமிருந்த சூழ்நிலையை அவனால் வெளிப்படுத்த முடிந்தது. அவன் சிறையிலிருந்தான். ஆனால் அவன் அதைக் குறித்து இந்த கிறிஸ்துவின் ஊழியக்காரனிடம், தன் உடன் ஊழியக்காரனிடம் கூறவில்லை. அவன் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு கட்டப்பட்ட ஒருவனாயிருந்தான் என்பதையே குறிப்பிடுகிறான். ஏனெனில் கிறிஸ்துவே வார்த்தையாயிருக்கிறார். 69. பவுல் தன் காலத்தில் சிறந்த மேதையாக இருந்தான். அவனுக்கு பெரியவனாக வேண்டும் என்னும் ஆவல் குடிக்கொண்டிருந்தது. அவன் சிறந்த மேதைகளிடம் கல்வி பயின்றான். கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு சிறந்த ஆசான் அவனுடைய நாட்களில் இருந்தான். அவன் அக்காலத்தில் மிகச் சிறப்பாக விளங்கிய ஒரு பள்ளிக்கு சென்றான். உதாரணமாக இன்று கூறுவோமானால், நாம் பெற்றுள்ள வீடன், பாய் ஜோன்ஸ் போன்ற சிறந்த பள்ளிகள் போல். அவன் வார்த்தையின் ஒரு ஊழியக்காரனாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். அவன் நன்கு கல்வி கற்றவன், சாமர்த்தியமுள்ளவன், மிகவும் புத்திசாலியான ஒரு இளைஞன். அவன் பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் அவனுக்குள் இருந்தது அல்லது தன்னுடைய ஜனங்களும் ஒரு பிரதான ஆசாரியனாக வேண்டுமென்று விரும்பினான். 70. அவனுக்கு பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவன் பயிற்சி பெற்றான். அவன் தன் வாழ்நாள் முழுவதையும் அதற்கென்று செலவழித்தான். ஒருக்கால் கிட்டத்தட்ட எட்டு அல்லது பத்து வயது தொடங்கி முப்பது அல்லது முப்பதைந்து வரைக்கும் பயின்று, கல்லூரி படிப்பை முடித்து, அவனுடைய எல்லா பட்டங்களையும் மற்ற ஒவ்வொன்றையும் பெற்றிருப்பான். அவன் அக்காலத்து குருமார்களின் சார்பில் இருந்தான். அவன் எருசலேமிலிருந்த பிரதான ஆசாரியனிடமும் பட்சமாய் இருந்தான். அவன் தனிப்பட்ட கட்டளைகளை அவரிடமிருந்து பெற்றான். அது எழுதப்பட்டு, நம்பத்தகுந்த இந்த மகத்தான சவுலிடம், “அவன் தமஸ்குவுக்குச் சென்று அவனுடைய கருத்துக்கு மாறான விதத்தில் தேவனை ஆராதிப்பவர்களைக் கட்டி சிறையிலடைக்க” ஒப்படைக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால், அவன் விரும்பினால், அவர்களைக் கொல்லவும் அவன் அதிகாரம் பெற்றிருந்தான். அவன்...அவனுக்கு பெரியவனாக வேண்டுமெனும் நோக்கம் இருந்தது. 71 . அதற்காக அவன் பெற்ற பயிற்சி அனைத்தும், தேவன் எல்லாவற்றையும் அவனைவிட்டு எடுத்துப்போட்டார். பார்த்தீர்களா? அவனுடைய நோக்கம் அதை நிறைவேற்ற அவன் தந்தை அவனுக்கு செலவு செய்த தொகை, அவன் தாய், தந்தை அவன் பெரியவனாக வேண்டுமென்று கொண்டிருந்த நோக்கம், இவையெல்லாம் அவனை விட்டு நீக்கப்பட்டது. ஏனெனில் தேவன் அவனுக்காக வேறொன்றை வைத்திருந்தார். எனவே அவன் வாழ்க்கையில் கொண்டிருந்த குறிக்கோளுக்கு கட்டப்பட்டவனாக இருப்பதை தவிர்த்து, வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக மாறினான். 72 . தமஸ்குவுக்கு போகும் வழி பவுலை மாற்றினது. பகல் வேளை சுமார் பதினோரு மணிக்கு அவன் போய்க் கொண்டிருந்தபோது, அவன் கீழே வீழ்த்தப்பட்டான். அப்பொழுது “சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று தன்னுடன் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன் அண்ணாந்து பார்த்தான். மேலே பார்த்தபோது, அவன் யூதனாயிருந்தபடியால், அந்த அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின கர்த்தர் என்பதை அறிந்து கொண்டான், ஏனென்றால் அதுவாகத்தான் அது இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். 73. இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த யூதன் வேறொரு வரையும் “ஆண்டவர்” ஏலோகிம் என்று அழைத்திருக்கமாட்டான். அவன் பயிற்சி பெற்ற மேதையானதால் அவர் யாரென்று திருப்தி கொள்ளாமல் அப்படி அழைத்திருக்கவே மாட்டான். அவன் அண்ணாந்து பார்த்தபோது தன் ஜனங்களை வனாந்திரத்தில் வழி நடத்தின இந்த ஒளியை ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அவன் கண்டான். அவன் உடனே “ஆண்டவரே” ஏலோகிம், ஆண்டவரே என்று ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் உள்ளது, “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். 74. அவர், "...இயேசு நானே..." என்று கூறினபோது, வேத சாஸ்திரம் படித்திருந்த இவனுக்கு எவ்வளவு ஆச்சிரியமாய் இருந்திருக்க வேண்டும்! அவன் யாருக்கு விரோதமாயிருந்தானோ அவர். என்ன ஒரு- -என்ன ஒரு திருப்பம்! ஓ!, ஓ! உயரிய குறிக்கோள்களைக் கொண்டிருந்த இந்த மனிதனுக்கு, அவன் யாரைத் துன்பப்படுத்திக்கொண்டிருந்தான் என்று கேட்டபோது, எவ்வளவு பயங்கரமான அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டுமே! அவனுடைய ஆசைகள் அவன் செய்ய வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்த முக்கியமான காரியத்திலிருந்து அவனைத் தூர விலக்கியிருந்தன. அவர், "இயேசு நானே” என்று கூறினதைக் கேட்டபோது, இந்த அப்போஸ்தனுக்கு அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும்! அவன் துன்பப்படுத்திக் கொண்டிருந்த அதே ஒருவர். “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றார். 75. இங்கு மற்றொரு சிறு மேற்கோளை நாம் பதியும்படிக் கூறலாம். அதாவது சபையை பரியாசம் செய்கிறவர்கள் உண்மையில் சபையைப் பரியாசம் செய்யவில்லை. அவர்கள் இயேசுவைப் பரியாசம் செய்கின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். "என்னை ஏன் துன்பப் படுத்துகிறாய்?” நுண்ணறிவு படைத்த பவுல், அவன் இந்த கூட்டத்தினரை துன்புறுத்தினதின் மூலம் அவன் சேவிப்பதாக உரிமைகோரின அந்த தேவனை துன்புறுத்தினான் என்பதை அவனால் எப்படி நம்ப முடிந்திருக்கும்? இதை அதிகமாக விளக்க அவசியமில்லை என்று நான் எண்ணுகிறேன். நான் இங்கே கூறுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள நாம் அனைவரும் நன்கு பயிற்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றே நான் எண்ணுகிறேன். அதேக் காரியம்தான் நடந்துகொண்டிருக்கிறது. 76. பவுல் அறியாமையின் காரணமாக, இருப்பினும் அவன் புத்திசாலி, சாமர்த்தியமுள்ளவன். அவன் துன்பப்படுத்தின படிப்பில்லாத கலிலேயர்களைக் காட்டிலும் மிகவும் சாமர்த்தியமுள்ளவன். இவர்கள் தங்கள் தாழ்மையில் கர்த்தரான இந்த மனிதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பவுலோ அதிகம் படித்தும் நுண்ணறிவு படைத்திருந்தும் கூட, அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமஸ்குவுக்குப் போகும் வழியில் அது அவனுக்கு எத்தகைய திருப்பமாயிருந்திருக்கும். அவன் குருடாக்கப்பட்டிருந்தான். எனவே அவனால் தன் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அவன் நேர்த்தெரு என்னப்பட்ட தெருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான், அங்கு ஒருவருடைய வீடு இருந்தது. 77. அப்பொழுது அனனியா என்னும் பெயருடைய ஒரு தீர்க்கதரிசி அவனை அங்கு சந்தித்தான். பவுல் வருவதை அவன் ஏற்கெனவே தரிசனத்தில் கண்டிருந்தான், அவன் இருந்த இடத்தை இவன் அடைந்து உள்ளே சென்றான். அப்பொழுது அவன், “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியில் உனக்குத் தரிசனமான கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் உன் மேல் கைகளை வைக்கும்படி என்னை அனுப்பினார்” என்றான். 78. அவன் எங்கே இருந்தான் என்று பாருங்கள். அது பவுலுக்கு எப்படிப்பட்ட ஒரு காரியமாய் இருந்திருக்க வேண்டும்! புரிகிறதா? அவன் செய்வதற்காக பெற்ற பயிற்சி அனைத்தும் எதிர்மாறாய் போய்விட்டது. எனவே அவனுடைய கல்வி அனைத்தும் அவனுக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 79 . அவனுக்கு ஒரு அனுபவம் உண்டானதென்று அவன் அறிந்து கொண்டான். இது இங்கு நமக்கு மற்றுமொரு பாடமாய் உள்ளது, அதாவது அனுபவம் மாத்திரம் போதாது, அது கர்த்தருடைய வார்த்தையின்படி உள்ள அனுபவமாக இருக்க வேண்டும். எனவே, அவன் அதை கண்டு, அது அவனுக்கு முன்பு இருந்த மற்றவர்கள் பெற்ற மகத்தான ஒன்று என்பதை அறிந்து, அரபிதேசத்து பாலைவனத்தில் மூன்று வருடம் ஆறுமாதாங்கள் செலவழித்து, அப்பொழுதிருந்த வேதாகமமான பழைய ஏற்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கு சென்று இது வேதபூர்வமானதா என்று அவன் கொண்டிருந்த அனுபவத்தோடு அதனை ஒப்பிட்டு பார்த்தான். 80. அவன், "அது ஒரு சிறு சம்பவம் என்று நான் யூகிக்கிறேன், நான்—நான் அறிவாளிகளையே பின்பற்றுவேன் என்று கூறி சென்றுவிட்டிருந்தால்” என்னவாயிருந்திருக்கும்? 81. அவன் ஏதோ ஒன்றிற்கு கட்டப்பட்டவனாக ஒரு சிறைவாசியாக வேண்டியிருந்தது. எனவே அவன் ஒப்பிட்டு பார்த்தபிறகு, முன்னடையாளங்களை உபயோகித்து எபிரெயர் நிரூபத்தை எழுதினான் என்பதில் வியப்பொன்றுமில்லையே. பார்த்தீர்களா? மூன்றரை வருட காலமாக அவன் அங்கு வார்த்தையில் கிடந்திருந்து, அவனை அழைத்த அதே தேவன் அவனுடைய அறிவு அனைத்தையும் மாற்றுவதைக் கண்டான். அவனுடைய சிந்தனை அனைத்தும், அவன் எதுவாக இருந்து பயிற்சி பெற்றிருந்தானோ அவை அனைத்தையும், அவனுடைய நோக்கம் அனைத்தும் அவனை விட்டு துடைத்து எடுத்துப்போட்டார். அவன் கட்டப்பட்டவனானான். தேவனுடைய அன்பு மிக அதிகமாக இருந்து, வெளிப்பாட்டை பெற்றபோது, அவனால் அதிலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை. 82. தேவனை சந்திக்கும் ஒவ்வொரு உண்மையான விசுவாசியின் அனுபமும் அதுவே. நீங்கள்—நீங்கள் பெரிய ஒன்றுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது...நீங்கள் மற்றெல்லாவற்றையும் விட்டு அதற்கு கட்டப்பட்டவர்களாகிவிடுகிறீர்கள். புரிகிறதா? மற்றெல்லாவற்றிலிருந்தும் நீங்கள் நீங்கள் விலகி, இதற்கு உங்களை கட்டப்பட்டவர்களாக்கிவிடுகிறீர்கள். 83 83. ஒரு முறை இயேசு, “பரலோக ராஜ்யம் ஒரு விலையுயர்ந்த முத்தை வாங்கும் வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அந்த விலையுயர்ந்த முத்தைக் கண்டு தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த முத்தைக் கொள்கிறான்” என்று கூறி வெளிப்படுத்தினார். 84. அந்தவிதமாகத்தான் இங்கு உள்ளது. உங்களுக்கு—உங்களுக்கு அறிவில் விளைந்த கருத்து உள்ளது. உங்களுக்கு ஒரு-ஒரு- ஒரு-ஒரு வேத சாஸ்திர அனுபவம் உள்ளது. ஆனால் நீங்கள் உண்மையானதை கண்டு கொள்ளும் நேரம் வரும்போது, நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அதற்குள் நுழைந்து மறைத்துக் கொள்கிறீர்கள். 85. அது என்னவாயிருந்தது என்று பவுல் அறிந்திருந்தான். அவன் ஏதோ ஒன்றுக்குள் சேணம் பூட்டப்பட்டிருந்தான் என்று அவன்— அவன் அறிந்து கொண்டான். நாம் ஏதோ ஒன்றை இழுக்க, நாம் ஒரு-ஒரு குதிரைக்கு சேணம் பூட்டி கொண்டு வருவது போலாகும். பவுல் தான் பெற்ற அனுபவத்தை மூன்றரை வருட காலமாக வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபிறகே அறிந்துகொண்டான். தேவன் அவனைப் பரிசுத்த ஆவியின் மூலம் தெரிந்துகொண்டார், அவனுக்கு சேணம் பூட்டினார் என்பதை தெளிவாக உணர்ந்தான். அவனுடைய அனுபவத்தின் மூலம் புறஜாதிகளின் முன்னால் சுவிசேஷத்தை இழுத்துக் கொண்டு வரவேண்டுமென்று பரிசுத்த ஆவியானவரே அவனுக்கு சேணம் பூட்டினார். 86. இன்றைக்கு கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்னும் முறையில் நாமும் கூட சேணம் பூட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளோம். எனவே நாம் தனிமையாக செல்ல முடியாது. நாம் அதனால் உள்ளே கொண்டு வரப்பட்டு நாம் வார்த்தைக்கு சேணம் பூட்டப்பட்டுள்ளோம். யார் என்ன கூறினாலும் கவலையில்லை. நீங்கள் அதற்கு சேணம் பூட்டப்பட்டிருக்கிறீர்கள். அதில் ஏதோ ஒன்றுள்ள காரணத்தால், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியினால் அதனுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அது வார்த்தையுடன் உங்களை நுகத்தில் பிணைத்திருக்கிறது. யார் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது வார்த்தையாயுள்ளது. அதனோடு எப்போதும் சேணம் பூட்டப்பட்டு கொண்டு வரப்பட்டு அதனுடன் நுகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு வார்த்தைக்கு சேணம் பூட்டப்பட்டான். 87. அவன் அங்கே அரபி தேசத்து பாலைவனத்தின் பின்பக்கத்தில் கற்றுக்கொண்டான். அவனுடைய எல்லா பழைய காரியங்களும் அனுபவங்களும், இலட்சியமும், அவனிலிருந்து அந்தக் காரியங்கள் களையப்பட்டன. 88 அவ்வாறே நாமும் முதலில் களையப்பட வேண்டுமென்று இன்று நாம் கண்டறிகிறோம். ஜனங்கள் களையப்பட விரும்புவதில்லை. மெதோடிஸ்டு சகோதரன் தன் மெதோடிஸ்டு போதகத்தை சிறிது பற்றிக் கொள்ள விரும்புகிறான். உ-ஊ. அதுபோல பாப்டிஸ்டு சகோதரனும் தன் பாப்டிஸ்டு போதகத்தை சிறிது பற்றிக்கொள்ள விரும்புகிறான். புரிகிறதா? ஆனால் நீங்கள் முற்றிலுமாக அவைகளிலிருந்து களையப்பட்டு, புதிதாக மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவி உங்களை வழி நடத்துவது போல அங்கிருந்து தொடங்க வேண்டும். "பாருங்கள், இப்பொழுது, என்—என் தகப்பனார் போதகருடன் சபையில் கைகுலுக்கினபோது இதை பெற்றுக்கொண்டார் என்று அவரே கூறினார். அவர்—அவர் ஒரு விசுவாசமுள்ள சபை உறுப்பினர்” என்று நீங்கள் சொல்ல முடியாது. அது அவருடைய இனத்துக்கு சரியாயிருந்திருக்கலாம். ஆனால் நாமோ வேறு இனத்தை சேர்ந்தவர்கள். புரிகிறதா? இப்பொழுது நாம் இந்த நாளில் வேதாகம முறைகளுக்கு திரும்பி வரவேண்டும். 89 ஆசாரியரும் கூட சேணம் பூட்டப்பட்டிருந்தனர். ஆனால் நீங்கள் பாருங்கள், அவர்கள் வேறொரு யுகத்தை அடைந்தபோது, பழைய சேணத்தை களைந்து புதுசேணத்தை பூட்டிக்கொள்ள அவர்கள்— அவர்கள் தவறிப்போயினர். 90 அதேக் காரியத்தை இன்றைக்கு நாம் கண்டறிகிறோம். நாம் சபை காலங்களைப் பற்றி பேசினபோது நிரூபித்தபடி, நாம் ஸ்தாபனங்களின் காலத்தை கடந்து வந்தோம். ஆனால் நாம் இப்பொழுது ஒரு அடிமையாயிராத காலத்திற்கு வந்துள்ளோம், இங்கே பரிசுத்த ஆவியானவரே இறங்கி வந்து, தம்மை ரூபகாரப்படுத்தி, தம்மை தெரியப்பண்ணி, அவர் வாக்களித்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஓ, என்னே! என்ன ஒரு மகத்தான நேரம்! 91. அவன் அதை அறிந்திருந்தான், வேறொரு காரியம், அவன் சேணம் பூட்டப்பட்டு, இதற்கு கொண்டுவரப்பட்ட பிறகு, அவனால் வேறெங்கும் செல்ல முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான்... ஆனால் அதே சமயத்தில் அவன் போக விரும்பினாலும் கூட அவன் போக முடியாதிருந்தது. அவன் பெரியவனாக வேண்டுமெனும் குறிக்கோள், அவன் வரும்படி அழைக்கப்பட்டிருந்த சகோதரர் மத்தியில் அவனை போகத்தூண்டினாலும், அவன் வேறொன்றைச் செய்ய ஆவியில் நெருக்கப்பட்டான். அவன் தனக்குச் சொந்தமானவனாயிருக்கவில்லை. 92 . யாராவாது ஒருவர் அவனிடம், “சகோதரன் சவுலே, சகோதரன் பவுலே, நீர் இங்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் நாங்கள் மிகப் பெரிய சபையை உடையவர்களாயிருக்கிறோம். நாங்கள் அதிக எண்ணிக்கை கொண்ட சபையை உடையவர்களாயிருக்கிறோம். உங்களுக்கு நிறைய காணிக்கை, முதலியன கிடைக்கும்” என்று கூறியிருக்கக் கூடும். 93. அவன் ஆவியில் நெருங்கி ஏவப்பட்டு, "இங்கு எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். நான் அங்கு சென்று இந்த சகோதரனை இரட்சிப்புக்குள் கொண்டு வர வேண்டும், அவரை கர்த்தரிடத்தில் கொண்டு வர விரும்புகிறேன்” என்று அவன் நினைத்திருப்பான். ஆனால் அதே சமயத்தில் வேறெங்கோ செல்லும்படி ஆவியானவர் அவனை நெருக்கி ஏவினார். அவன் ஒரு சிறைவாசியாயிருந்தான். சரியாக. 94. ஓ, தேவனே, எங்களை அதுபோன்ற சிறைவாசிகளாக்கி, எங்களுடைய சொந்த சுயநல குறிக்கோளிலிருந்தும், எங்களுடைய சொந்த தீர்ப்புகள், எங்களுடைய சிறந்த சிந்தனைகளின் வழியிலிருந்து விடுபட்டு, இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டவர்களாயிருக்கச் செய்யும். “நான் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாயிருக்கிறேன்” என்பதே ஒரு மகத்தான வாக்குமூலம் என்று நான் கருதுகிறேன். 95. ஞாபகம் கொள்ளுங்கள், அவரே வார்த்தை. புரிகிறதா? யார் என்ன நினைத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது வார்த்தையாயுள்ளது. புரிகிறதா? நீங்கள் வார்த்தைக்கு ஒரு சிறைவாசியாயிருந்தால், எந்த ஸ்தாபனமும் உங்களை அதிலிருந்து விலகச் செய்ய முடியாது. அது—அது வார்த்தை. அதற்கு நீங்கள் கட்டப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அவ்வளவு தான். அது செயல்படுகிற விதமாகவே நீங்களும் நடந்து கொள்ள வேண்டும். 96. அவன் போக விரும்பின குறிப்பிட்ட இடங்களுக்கு அவனால் செல்ல முடியவில்லை. காரணம் (ஏன்?) பரிசுத்த ஆவி அவனைத் தடை செய்தார். அநேக சமயங்களில் பவுல் ஒரு இடத்துக்கு போக நினைத்து, "அங்கு எனக்கு ஒரு பெரிய கூட்டம் நடக்க ஏதுவுண்டு” என்று எண்ணினபோது, ஆவியானவர் அவனைப் போகவிடவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கும். பவுல் ஒரு சிறைவாசியாயிருந்தான் என்பதை அது தெளிவாக எடுத்துக் காட்டி நிரூபிக்கிறதல்லவா? (சபையோர், “ஆமென்” என்கிறார்.-ஆசி.) யேசு கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசி, ஆவியினால் அவருடைய வார்த்தைக்கு சேணம் பூட்டப்பட்டான். ஓ! அது எனக்குப் பிரியம். உ -ஊ. 97. அவன் கட்டப்பட்டிருந்தான். அவன் தேவனுடைய சித்தத்தை செய்ய, அதை மாத்திரம் செய்ய, ஒரு சங்கிலியால், அன்பு என்னும் விலங்கிடப்பட்ட சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்தான். அவன் ஒரு சிறைவாசியாயிருந்தான். அவன் அன்பின் விலங்கிடப்பட்ட சங்கிலிகளில் இருந்தான். அவன் கிறிஸ்துவினுடன் நுகத்திலே இருந்தான். அவன் வேறு எதனோடும் நுகத்திலே பிணைக்கப்பட முடியாது. அவரோடு அவன் நுகத்தில் இணைக்கப்பட்டிருந்தான். அவர் அவனை எங்கு வழி நடத்தினாரோ, அங்கு செல்ல வேண்டியவனாயிருந்தான். அவனுக்கு பாதையின் இப்பக்கமும் அப்பக்கமும் பசுமையாய் காணப்பட்ட போதிலும் அவனால் அங்கு செல்ல முடியவில்லை. தலைவரும் நுகமும் சென்ற பாதையிலேயே அவன் செல்ல வேண்டியிருந்தது. 98. “ஓ, பிரான்ஹாம் கூடாரத்தினராகிய நாம் இன்றிரவு நம்முடைய சொந்த சுயநலத்தையும், நம்முடைய சொந்த குறிக்கோள்களையும் கைவிட்டு விட்டு, நம்மை முழுவதும் அர்பணித்து அவருடன் நுகத்தில் பிணைக்கப்பட்டு, கட்டப்பட்டவர்களாக ஆக முடிந்தால் நலமாயிருக்குமே! உலகத்திலுள்ள மற்றவர் என்ன நினைத்தாலும், உலகத்தில் உள்ள மற்றவர்கள் என்ன செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நாம் அன்பின் சங்கிலிகளினால் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சிறைவாசிகளாயிருக்கிறோம். “என் கால் கிறிஸ்துவினுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், அது நடனமாடாது. நவீன அரை நிர்வாணிகளை நான் தெருவில் காணும்போது, அது என் தலையை வேறுபக்கமாக திருப்புமளவிற்கு என் கண்கள் கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டுள்ளன. நான் இனிமேல் இந்த உலகத்தின் மேல் அன்பு கூற முடியாதபடி என்- என் இருதயம் அன்பினால் அவருடன் பிணைக்கப்பட்டுள்ளது. என் குறிக்கோள் என்னவென்று கூட எனக்கே தெரியாத அளவிற்கு என் சித்தம் அவருடன் இணைக்கப்பட்டுள்ளது, 'கர்த்தாவே, என்னை நீர் எங்கு நடத்தினாலும் உம்மைப் பின் தொடர்ந்து செல்வேன்.' நான் ஒரு சிறைவாசியாயிருப்பேன்” பார்த்தீர்களா? 99. பவுல் சரியாக ஒரு சிறைவாசியாயிருந்தான். அவன் தவறான எந்த வாக்குமூலத்தையும் கூறிக்கொண்டிருக்கவில்லை. அவன் வார்த்தையின் பேரில் காத்திருக்க மீண்டும் பரிசுத்த ஆவியானவரால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு ஒரு வழியில் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது, ஆனால்—ஆனால் தேவன் அவனுக்கு வேறொரு வழியில் பயிற்சியளித்திருந்தார். அவனுடைய குறிக்கோள் என்னவாயிருந்தபோதிலும் கவலைப்படாமல், அவன் கர்த்தர் பேரில் காத்திருக்க பரிசுத்த ஆவியினால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். 100. பரிசுத்த ஆவியின் உதவியினால் நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கப் போகிறேன். பார்க்கலாமா? இப்பொழுது நாம் உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொள்வோம். 101. ஒரு நாள் பவுலும் சீலாவும் ஒரு குறிப்பிட்ட நகரிலிருந்த தெருவின் வழியாய் வந்து கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது பிசாசு பிடித்த ஒரு பெண் பவுலை பின் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே வந்தாள். அந்த பெண்ணிலிருந்த பொல்லாத ஆவியைக் கடிந்து கொண்டு அவளை விட்டு வெளியே வரும்படி கட்டளையிட அப்போஸ்தலன் என்னும் முறையில் அவனுக்கு அதிகாரம் இருந்ததென்று பவுல் அறிந்திருந்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? அவன் ஒவ்வொரு நாளும் காத்திருந்தபோது திடீரென்று பரிசுத்த ஆவியானவர் அவனிடம் பேசினார். அப்பொழுது அவர், "இது தான் அந்த நேரம்” என்று கூறினார். 102. அப்பொழுது பவுல், "அசுத்த ஆவியே, அவளை விட்டு வெளியே வா” என்று கூறினான். புரிகிறதா? அவன் கர்த்தருக்குக் காத்திருக்க அறிந்திருந்தான். 103 . அங்குதான் இன்று அநேகர் வார்த்தையின் பேரில் நிந்தையை வருவிக்கின்றனர். அவர்கள் தங்கள் சுய ஆசைகளுடன் செல்கின்றனர். அதன் விளைவாக எத்தனை எழுப்புதல்கள் தோல்வியடைந்துள்ளன? ஏனென்றால் கர்த்தர் என்ன கூறுகிறார் என்று அறிந்து கொள்ள சுவிசேஷகன் காத்திருக்கிறதில்லை. அவர்களில் சிலர், "இங்கு வாருங்கள்” என்று அழைத்தால் அவர்கள் உடனே அங்கு சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய சங்கம் “போய்விடுங்கள்” என்று உத்தரவிடுகிறது. பரிசுத்த ஆவியானவர் அதற்கு மாறாகக் கூறியிருப்பார். இருப்பினும் அந்த மனிதனுக்கு மாகாண போதகர், அல்லது—அல்லது மற்ற யாரோ ஒருவர் அல்லது ஒரு உதவிக்காரர் அல்லது ஒரு பேராயர் அல்லது ஏதோ ஒரு காரியம், “நீ போக வேண்டும்” என்று இழுக்கிறது. அதே சமயத்தில் அங்கு போகக் கூடாதென்று அவருக்கு நன்கு தெரியும். ஏனெனில் பரிசுத்த ஆவி, "இங்கே போ" என்கிறார். புரிகிறதா? அவர் தன் ஸ்தாபனத்துடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஸ்தாபனத்துக்கு ஒரு சிறைவாசியாயிருக்கிறார். 104. ஆனால் அவர் கிறிஸ்துவுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவர் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவார்! அவர்...? புரிகிறதா? அவர், அவர் இயேசுவினால் பிணைக்கப்பட்ட ஒரு சிறைவாசியாவார். அப்பொழுது யார் என்ன கூறினாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது; அது —அது—அது ஒரு சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருக்கும். அவர் தேவனுடைய சத்தத்துக்கு மாத்திரமே செவி கொடுத்து, அது வெளிப்படும்போது மாத்திரமே அவர் பேசுவார். அவர் வேறொன்றையும் பேசமாட்டார். 105. யாராவது ஒருவர், "ஓ, ஓ, சகோதரன் ஜோன்ஸ்!” என்று கூறினாலும், சகோ.ராபர்ட்ஸ் அல்லது வேறு யாரோ ஒருவர் என்பார்களானாலும் அல்லது இன்றைக்கு நமது தேசத்திலுள்ள டாமி ஹிக்ஸ், அல்லது—அல்லது ஓரல் ராபர்ட்ஸ், அல்லது டாமி ஆஸ்பர்ன் போன்ற பெரிய மனிதர்கள், அந்த பெரிய சுவிசேஷகர்களில் சிலர் கூறினாலும் சரி. யாராவது ஒருவர், “டாமி இங்கு வாருங்கள், நீங்கள் தேவனுடைய மகத்தான மனிதர் (அல்லது ஓரல்,) என் மாமா அங்கு வியாதியாய் கட்டுண்டு கிடக்கிறார். நீங்கள் வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவரைச் சுகப்படுத்த உங்களிடம் வல்லமை உண்டு என்று நான் நம்புகிறேன்” என்று கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். புரிகிறதா? ஒருக்கால் பரிசுத்த ஆவி அவரிடம் "இப்பொழுது போக வேண்டாம்” என்று கூறியிருக்கக்கூடும். 106. ஆயினும் அதே சமயத்தில் அந்த மனிதனிடம் அவர் கொண்டுள்ள நட்பின் நிமித்தம், அவர் அவருடன் செல்ல கடமைப்பட்டிருக்கிறார். அவர் அப்படி போகாவிட்டால், அந்த மனிதனுக்கு சத்துருவாகிவிடுகிறார். அந்த மனிதன், "அவர் இன்னார் இன்னாரிடம் சென்று அந்த பிள்ளைக்கு அல்லது அந்த பையனை சுகமாக்கினார். அவர் அதைச் செய்தது எனக்குத் தெரியும். பாருங்கள், நான் அநேக ஆண்டுகளாக அவர் நண்பராயிருந்தும் கூட, என்னுடைய இடத்திற்கு வரமாட்டேன் என்கிறார்” என்று கூறுவார். 107 ஆனால் அவர் பரிசுத்த ஆவியினால் அங்கு போக வேண்டாம் என்று தடை செய்யப்பட்டால், அவர் தேவனோடு நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவர் அங்கு போகாமலிருப்பது நல்லது. அவருடைய நண்பரை அவர் நேசிக்கிறார். இருப்பினும் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டால் மாத்திரம் அங்கு செல்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் செல்வதில் ஒரு பிரயோஜனமுமில்லை. அந்த அனுபவம் எனக்கு எத்தனையோ முறை உண்டாயிருக்கிறது. 108 . பவுல் என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவி கூறும் வரைக்கும் அவன் காத்திருந்தான். "பரிசுத்த ஆவிக்காக காத்திருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு இரவு அவன் நின்று பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு நடந்து சென்றபோது கால்கள் வழங்காத ஒரு மனிதனை அவன் கண்டான். திடீரென்று ஆவியானவர் அவனிடம் பேசினார். அப்பொழுது அவன், “நான் காண்கிறேன்”(perceive) என்றான். எப்படி? ஒரு தீவில் அவர்களுக்கு கப்பல் சேதம் ஏற்படும் என்று அவன் கண்ட அதேவிதமாகவே. புரிகிறதா? "நீ சுகம் பெற உனக்கு விசுவாசம் உண்டென்று நான் காண்கிறேன். எழுந்து காலூன்றி நில். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்கினார்." பார்த்தீர்களா? அங்குதான் காரியமே உள்ளது. அவன்—அவன் பிணைக்கப்பட்டிருந்தான். அவன் ஒரு வாரம் எழுப்புதல் கூட்டம் நடத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் பரிசுத்த ஆவி உரைக்கும் வரைக்கும் அவன் காத்திருந்தான். புரிகிறதா? அவன் அந்த முறையீட்டிற்கு பிணைக்கப்பட்டிருந்தான். 109. நீங்கள், "சகோ.பிரான்ஹாமே, நீங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறினதற்கு இப்பொழுது முரணாகக் கூறுகிறீர்களே, இவ்வளவு காலமாக காத்திருந்ததைக் குறித்து” எனலாம். 110. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே என்னிடம் வழியில் பேசி "உன்னை வியாதியஸ்தர்களிடத்திற்கும், பாதிக்கப்பட்டோர்களிடத்திற்கும் அனுப்புகிறேன்” என்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா? அது பரிசுத்த ஆவிக்கு கீழ்படிதல். நிச்சயமாக. அவர் நான் போய் அதைச் செய்யும்படி கட்டளையிடும் வரைக்கும் நான் போகவில்லை. நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது எனக்கு கிடைக்கும் வரையில் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்காக காத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது அது வித்தியாசமாயுள்ளது. புரிகிறதா? இப்பொழுது அது, அது ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. ஆம். 111 . அவன் கர்த்தருடைய வார்த்தைக்காகத் காத்திருந்தான். தேவனுடைய கட்டளையைச் செய்யவே ஆவியானவர் அவனை வற்புறுத்தினார். அவன் அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் சிறைவாசியானான். நண்பர்களே, நாம் மட்டும் சிறைவாசிகளாகிவிட்டால் நலமாயிருக்குமே! 112. இங்கு உஷ்ணமாயுள்ளதென்று நான் அறிவேன். ஆனால் நீங்கள் விரும்பினால், நான்—நான் இன்னும் வேதத்திலுள்ள இரண்டு பேர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு ஆறு அல்லது எட்டு பேர்களை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நான்—நான் இன்னும் மற்றொரு இல்லை இரண்டு பேருடைய பாத்திரங்களை மாத்திரமே குறிப்பிட விரும்புகிறேன். 113. நாம் மோசேயின் குணாதிசயத்தை எடுத்துக் கொள்வோம். அவன் விடுவிப்பவனாகப் பிறந்தவன். அவன்-அவன் அவன் விடுவிக்கப் பிறந்தவன் என்பதை அவன் அறிந்திருந்தான். 114. ஆனால் மோசேயைக் குறித்து கூறுவதற்கு முன்பு நான் இந்த வாக்குமூலத்தை கூற விரும்புகிறேன். தேவன் எப்பொழுதுமே தனக்கு உண்மையாய் சேவிக்க மனதுடைய ஒருவனை தெரிந்து கொண்டு அவனை அவருடைய சிறைவாசியாக்குகிறார். ஒரு மனிதன் தனக்குள்ள சுய ஆசை அனைத்தும், அவனுக்குள்ள அனைத்தும், ஒவ்வொரு-ஒவ்வொரு காரியமும், அவனுடைய ஜீவன், ஆத்துமா, சரீரம், சித்தம், சுய ஆசை அனைத்தும் ஒப்புவித்து, வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு முற்றிலும் கட்டப்பட்டவனாகி, தேவனைச் சேவிக்க வேண்டும். 115 . நீங்கள் உங்கள் கருத்துக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருக்கால் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனம் உங்களை உயர்த்தி, நீங்கள் பிரகாசிப்பதற்கென ஒரு பெரிய பதவியைக் கொடுக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் அதனால் நீங்கள் உங்களுக்கு என்ன கண்டடைகிறீர்கள்? சில நாட்கள் கழித்து நீங்கள் தோல்வியடைந்த நிலையில் உள்ளதைக் காண்பீர்கள். தேவன் தமக்கு கட்டப்பட்ட சித்தமுள்ள ஒருவனைப் பெறும் வரைக்கும் அவ்வாறே இருக்கும். 116. தேவன் சிறைவாசிகளுக்காகவே நோக்கிக் கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதுமே அதை செய்துள்ளார். நீங்கள் அதை வேதவாக்கியத்தினூடாக கண்டறியலாம். ஒரு மனிதன் எல்லாவற்றிற்கும் எதிராக கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக ஆக வேண்டும். எனவே கிறிஸ்துவைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அது உங்களுடைய தகப்பன், உங்களுடைய தாய், உங்களுடைய சகோதரன், உங்களுடைய சகோதரி, உங்களுடைய கணவன், உங்களுடைய மனைவி யாராயிருந்தாலும் சரி. நீங்கள் கிறிஸ்துவுடன் மாத்திரமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே தேவன் உங்களை உபயோகிக்க முடியும். அதுவரைக்கும் அவர் உங்களை உபயோகிக்க முடியாது. 117. சில சமயங்களில் நான் வெளியே செல்லும்போது, ஜனங்களிடம் கடினமாக பேசுகிறேன். பாருங்கள்? அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்றே நான்—நான் கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எங்காவது ஓரிடத்தில் தொடங்க வேண்டும். உதாரணமாக சில சமயங்களில், பெண்கள் தங்களுடைய தலைமுடியைக் கத்தரித்து, அவலட்சணமான உடைகளை உடுத்தி, அதே சமயத்தில் கிறிஸ்தவர்களென்று கூறி வருகிறதற்கு எதிராக கூக்குரலிடவேண்டியதாயுள்ளது. நீங்கள், “அது சிறிய காரியம்” எனலாம். பாருங்கள், நீங்கள் எங்காவது ஒரிடத்தில் தொடங்க வேண்டும். எனவே நீங்கள் அங்கே உங்களுடைய சிறு காரியங்களில் தொடங்குங்கள். புரிகிறதா? உலகப்பிரகாரமான பார்வைகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாக மாறுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக விட்டுவிட்டு முடிவில் கடைசியான காரியத்தை விட்டொழித்துவிடுங்கள். அப்பொழுது நீங்கள்— நீங்கள்—நீங்கள் ஒரு சிறைவாசியாகிறீர்கள். அவருடைய பிடியில் நீங்கள் வந்துவிடுவீர்கள். அவர்—அவர் உங்களைத் தமது பிடியில் கொண்டிருப்பார். 118 . இப்பொழுது, மோசே இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கப் பிறந்தவன் என்று அறிந்திருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். மோசேக்கு இருந்த ஆசையை கவனித்தீர்களா? அவனுடைய தாய் தான் அவனுக்கு பால் கொடுக்கும் ஸ்திரீயாக இருந்தாள் என்று அவள் கூறியிருந்ததை அறிந்திருப்பான். 119 . மோசே ஒரு குழந்தையாய்ப் பிறந்தபோது அவனுடைய தாய், “மோசே, உனக்குத் தெரியுமா, உன் தகப்பன் அம்ராமும் நானும் எப்பொழுதுமே ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தோம் என்று கூறியிருப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. மீட்கிறவன் ஒருவன் வருவதற்கான நேரம் வந்துவிட்டதென்று வார்த்தையைப் பார்த்து நாங்கள் அறிந்து கொண்டோம். அப்பொழுது நாங்கள், 'தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் அந்த மீட்கிறவனைக் காண விரும்புகிறோம்' என்று ஜெபம் செய்தோம். ஒரு நாள் இரவு கர்த்தர் எங்களுக்கு தரிசனத்தில், நீ பிறப்பாய் என்றும், நீ தான் மீட்கிறவனாய் இருப்பாய் என்றும் கூறினார். நாங்கள் ராஜாவினுடைய கட்டளைக்கு பயப்படவில்லை, ராஜ கூறினதற்கு நாங்கள் கவலை கொள்ளவில்லை. அப்பொழுது நீ மீட்கிறவனாக பிறந்திருக்கிறாய் என்று நாங்கள் அறிந்து கொண்டோம். மோசே, உன்னை நாங்கள் சரியான விதத்தில் வளர்க்க முடியாதென்று அறிந்தோம்” என்றான். 120. அவர்கள் நானூறு ஆண்டுகளாக எகிப்தில் இருந்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள் புரிகிறதா? 121. "உனக்கு நாங்கள்—நாங்கள் சரியான காரியத்தை, சரியான கல்வியைக் கொடுக்க வேண்டும். சரியான பயிற்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினோம். எனவே நான் உன்னை ஒரு சிறு நாணற்பெட்டியில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டேன். எப்படியோ எதிர்பாராதவிதமாக நாணற்புல்லின் வழியாக மைல் கணக்காக தள்ளிக் கொண்டு வந்து பார்வோனின் அரண்மனை பக்கம் திருப்பிவிட்டேன். அங்கே பார்வோனின் குமாரத்தி...அங்குதான் அவள் குளிக்கும் இடம் இருந்தது. உனக்கு பால் கொடுக்க ஒரு ஸ்திரீ தேவைப்படும் என்று நான் அறிந்தேன்.” 122 . அந்த காலத்தில் உண்மையாகவே குழந்தைகளுக்கு பாலூட்ட பால் புட்டிகள் கிடையாது. எனவே அவர்கள் பால் கொடுக்கும் ஒருத்தியை அமர்த்த வேண்டியதாயிருந்தது, எனவே... 123. "நான் மிரியாமை அங்கு அனுப்பினேன். அவள் அங்கு நின்று கொண்டு, 'பால் கொடுப்பவள் எங்கிருக்கிறாள் என்று என்னால் கண்டறிய முடியும் என்பது எனக்குத் தெரியும்' என்று சொல்லி, என்னை அழைத்து சென்றாள். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டப் பிறகு மோசே என்றழைத்து, தேனே, உனக்கு இப்பொழுது பதினாறு வயதாகிவிட்டது. நீ பார்வோனின் குமாரனாகப் போகின்றாய். என்றோ ஒரு நாள் நீ ஜனங்களை விடுவித்து இங்கிருந்து கொண்டு செல்லப் போகிறாய்" என்றாள். 124 . மோசேயின் ஆசையோ, அதிகமாகத் தொடங்கிவிட்டது, அம்மா, "நான் படிப்பேன்! என்னால் முடிந்த எல்லாவற்றையும் படிப்பேன். நான் என்ன செய்வேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் எப்படி ஒரு இராணுவ வீரனாக இருக்க வேண்டும் என்றும், எப்படி இந்த ஜனங்களை மீட்டு இங்கிருந்து கொண்டு போவதென்று நான் படித்து அறிந்துகொள்வேன். நான் ஒரு பெரிய தளபதியாக, பேராயராக இருப்பேன். எனவே அதை எப்படி செய்வதென்று எனக்குத் தெரியும். அப்பொழுது நான்—நான் அவர்களை வெளியே கொண்டு செல்வேன். நான் என்னுடைய தத்துவ மற்றும் இதர பட்டங்களைப் பெற்றுக்கொள்வேன். அதன்பின்னர் நான்—நான் அதைச் செய்வேன்” என்றான். 125 . கத்தோலிக்க குருவானவர் "பிதா சினிக்வியைப்” போல், அவருடைய புத்தகத்தை நீங்கள் படித்ததுண்டா? சரி, அவர் "பிராடெஸ்டெண்டுகளை அந்த மார்க்கத்திலிருந்து விடுவிக்கப் போய்” அவரே பிராடெஸ்டெண்டாகி விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனவே, இந்த சிறந்த குருவானவர் சினிக்வி, அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆவர் எழுதின “பிதா சினிக்வி” என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். அவர்கள் அவரை “பிதா” என்று அழைக்கிறார்கள். அவர் வெறுமென சகோதரன் சினிக்வி, என்று தான் அழைத்துக் கொண்டார். நாம் எந்த மனிதனையும் அந்தவிதமாக “பிதா” என்று அழைக்கிறதில்லை. அவர் பிராடெஸ்டெண்டு மார்க்கம் தவறென்று நிரூபிக்கவும், அவர்கள் எல்லோரையுமே கத்தோலிக்கராக்க, வேதாகமத்தை படித்தார் என்பதை என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் வேதாகமத்தை படிக்கத் தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்தார், அப்பொழுது அவர் பரிசுத்த ஆவியைப் பெற்று, அதன்பின்னர்—அதன்பின்னர் அவர்களில் ஒருவரைப்போல ஆகிவிட்டார். 126. எனவே, இதை கவனியுங்கள். மோசே எல்லா பயிற்சியும் பெற்றான், ஏனெனில் அவனுக்குத்—அவனுக்குத் தெரியும்... அவன் மிகவும் சாமர்த்தியசாலி, அதிக கல்வி கற்றவன், அதிக நுண்ணறிவு படைத்தவன், எனவே யாருமே...அவனால் எகிப்தியருக்கும் கூட கற்றுத்தர முடிந்தது. அவனால் அவர்களுடைய மனோதத்துவ நிபுணருக்கு கற்றுத்தர முடிந்தது. இராணுவ பராக்கிரமம் என்னவென்று அவர்களுடைய—அவர்களுடைய தளபதிகளுக்கும் அவனால் கற்றுத்தர முடிந்தது. அவன் ஒரு மகத்தான மனிதனாயிருந்தான். அவனுடைய மேன்மையின் காரணமாக ஜனங்கள் மோசேக்கும் பயந்தனர். ஓ, அப்படிப்பட்ட பட்ட மேதை! என்னே! அவன் ஒரு தலைமைப் பேராயர் அல்லது போப்பாண்டவராக இருந்திருக்கலாம். அவன் ஒரு மகத்தான நபராயிருந்தான். அவன் ஒரு ஒருஒரு பராக்கிரமுள்ள மனிதனாயிருந்தான். அவன் இதை செய்ய பிறந்திருந்தான் என்பதை அவன் அறிந்தனாய், தன் பெரிய குறிக்கோள் நிறைவேற வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டவனாய் பயிற்சி பெற்றான். 127. இன்றைக்கு நடப்பது போல். நான் அந்த மனிதர்களை, வேதாகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்களைக் கூறவில்லை. நான் அப்படி கூறவில்லை...இங்கு மேற்கு பாகத்தில் பதினைந்து கோடி டாலர் செலவில் வேத சாஸ்திரப் பள்ளி ஒன்றைக் கட்டப்போகிறார்கள், பாருங்கள், பெந்தெகொஸ்தேகாரர் பதினைந்து கோடி டாலர் செலவில் பள்ளி. என்னை பொறுத்த வரையில், அது ஊழிய களத்தில் உள்ள மிஷனரிமார்களுக்கு செலவிடப்பட வேண்டும். புரிகிறதா? பார்த்தீர்களா? புரிகிறதா? ஆனால் எப்படியானாலும் சரி. அவர்கள் வேதாகமப் பள்ளியை விட்டு வெளிவரும் போது, அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் என்னவாயிருக்கின்றனர்? ஒரு கூட்டம் நவநாகரீக பண்பற்ற ரிக்கிகளாக உள்ளனர். நிச்சயமாக. அதன்பின்னர் அப்படித்தான் அவர்கள் வெளியே வருகின்றனர். அதேவிதமாகத்தான் வேதாகமப் பள்ளியை விட்டு வெளிவரும் மற்றவர்களும் உள்ளனர். புரிகிறதா? 128. இப்பொழுது நாம் கண்டறிவதென்னவெனில், மோசே தான் பெற்ற பயிற்சி அனைத்திலும், இன்றைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பெரிய பேராயர்களை, மகத்தான, உயரிய பேராசையை உருவாக்கின பின்பு, நாம் என்ன செய்வோம்? நம்முடைய சுய ஆசைகளும் மோசேயின் ஆசைகளைப் போல ஆகிவிடுகின்றன. புரிகிறதா? 129 . தேவன் மோசேயை தம் கரங்களில் கொள்வதற்கு முன்பு, அவர் அவனுடைய பேராசையை களைய வேண்டியதாயிருந்தது. அவனுடைய பயிற்சி அனைத்தையும் அவர் களைய வேண்டியதாயிற்று. 130 . அவன் வெளியே சென்றான். அவன் விடுவித்தான்; அவன் ஒரு எகிப்தியனைக் கொன்றான். அவன் அப்படி செய்தபொழுது, அவன் தவறானதில் இருந்தான் என்பதை அவன் கண்டான். அவன் அப்படி செய்திருக்கக் கூடாது. அதுவல்ல முறை. தேவன் அவனை வனாந்திரத்திற்கு, வனாந்திரத்திற்குள்ளாக, ஒரு வனாந்திரமான இடத்திற்கு கொண்டு போக வேண்டியதாயிருந்தது. 131 . நீங்கள் கவனிப்பீர்களானால், தேவன் யாருக்காக ஒரு செய்தியை வைத்திருக்கிறாரோ, அந்த ஒரு விதமான விநோதமான நபர்களையெல்லாம், அவர் வனாந்திரத்துக்கு கொண்டு செல்கிறார். 132. அவர் பவுலுக்கு பயிற்சி அளிப்பதற்காக அவனை வனாந்தரத்துக்கு, அதாவது, அவன் கண்ட இந்த மகத்தான தரிசனங்கள் அனைத்தையும் விளக்கிக்கூற வனாந்திரத்துக்கு கொண்டு சென்றார். “ஓரு குறிப்பிட்ட வனாந்தரத்துக்கு போ." என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனுக்கு முழுவதுமாக அறிவிக்கும் வரையில் அவன் அங்கு தரித்திருந்தான். 133 . மோசேயின் காலத்திலே, அவர் அவனை வனாந்தரத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை நாற்பது ஆண்டுகள் தங்கும்படி செய்து, அவனுடைய வேத சாஸ்திரம் அனைத்தையும் சுய ஆசைகள் அனைத்தையும் களைந்தார். ஓ, அவன் திரும்பி பார்த்து அவனுடைய தோல்விகளைக் காண அது எத்தகைய தருணமாயிருந்தது! நம்முடைய சுய ஆசைகளை நாம் காணும்போது, இன்றிரவு நாமும் அதை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். 134. சுகமளிக்கும் கூட்டங்களைக் கவனித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தேவன் வியாதியஸ்தருக்கு சுகமளிக்கத் தொடங்கினாரா என்பதை பாருங்கள். 135. ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஸ்தாபனமும், சுகமளிக்கும் வரம் பெற்றவர் தங்கள் ஸ்தாபனத்தில் சேர மறுத்த காரணத்தால், அவர்கள் தங்களுக்கென சுகமளிக்கும் ஒருவரைப் பெற விழைந்தனர். நாம் என்ன செய்துவிட்டோம்? நாம் அதை சிறிது நேரம் சிந்திப்போம். மோசே செய்த அதே காரியத்தை நாம் செய்துள்ளோம். நாம் சென்று ஏதோ ஒரு விதமான அற்புதத்தை உற்பத்தி செய்ய முயன்றோம். "நான் வியாதியை முகருகிறேன். என்—என்—என் கையில் இரத்தம் வடிகிறது” என்று கூறினோம். ஒரு அற்புதத்தை உற்பத்தி செய்தல். பார்த்தீர்களா? இப்பொழுது நாம் பெற்றுள்ளது என்ன? அவர்களில் சிலர், அதிக இறுக்கமடைந்து, அதை விட்டு விலகி, நிரந்தரமான குடிகாரராகவும், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களாகவும் தங்கள் சிந்தைகளை கெடுத்துக்கொண்டனர். அவர்கள் திரும்பிச் சென்று, பெந்தேகோஸ்தே குறிக்கோளிலிருந்து அகன்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு விட்டனர். புரிகிறதா? 136 . நாம் என்ன செய்து விட்டோம்? நாம் ஒரு எகிப்தியனைக் கொன்றோம். அது உண்மை. நாம் முயன்று, நாம் பாடுபட்டு, நாம் பணம் கொடுத்து, நாம் ஜெபக் கூட்டங்களில் இரவு முழுவதும் உழைத்தும், நாம் எந்த ஆதரவையும் பெறவில்லை. எனவே நாம் ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முயன்று, ஏதோ ஒரு விருந்து, இந்தக் காரியங்களின் எல்லா மாதிரிகளிலும் முழுவதும் தோல்வி அடைந்து விட்டதையே கண்டறிகிறோம். நாம் வனாந்திரத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டியது அவசியம். அது உண்மை. ஆம், ஐயா. விரிசல்களும், போராட்டங்களும். அதை ஏன் விட்டு விடக்கூடாது? அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும், பாருங்கள், திரும்பிச் சென்று அதை கைவிட்டு விட வேண்டும். ஏன், நாம் மோசே புரிந்த அதே செயலை செய்து கொண்டு வந்தோம். அதனால் ஒரு உபயோகமுமில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்து மோசே, அவன் தானே தேவனுடைய வார்த்தைக்கு ஒரு சிறைவாசியாக இருப்பதை அறிந்து கொண்டான். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? 137 . தேவன் நம்மைக் குறித்து கூறியுள்ள இந்த மகத்தான காரியங்களின் எல்லா வெளிப்படுத்துதலுமான, நாம் எப்படி மறுபடியும் பிறக்க வேண்டும்; நாம் எப்படி பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற சத்தியங்கள் எடுத்துரைக்கப்பட்டபோது, இந்த மகத்தான ஆசீர்வாதங்கள் உண்டாயின. 138. நீங்கள் பாருங்கள், ஜனங்கள் வார்த்தைக்கு சேணம் பூட்டப்பட்டு, அதில் நிலைத்திருப்பதற்கு பதிலாக, அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் சொந்த ஸ்தாபன தத்துவங்களை கைக்கொள்ளத் தொடங்கினர். அது ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. உண்மையைப் போல் காட்சியளிக்கும் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய முயற்சிக்கின்றனர். 139. இத்துடன் இதை நான் நிறுத்திக் கொள்வது நலம். புரிகிறதா? நான் கூறுவதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள் உங்களுக்கு போதிய ஞானம் உள்ளதென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். புரிகிறதா? ஆனால் அது என்ன விளைவித்தது என்று பாருங்கள். அதை சிந்தித்து பாருங்கள். 140 . இன்றிரவு நாம் என்ன பெற்றுள்ளோம்? முழுவதும் ஸ்தாபனங்களால் நிறைந்த ஒரு ஒரு ஒரு தேசம். அவர்கள் வேத வசனங்களை மறுதலித்து, பரிசுத்த ஆவியின் ஜீவனை, "மனோதத்துவத்தினால் மனதிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளுதல்” (mental Telepathy) என்றழைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை அவர்கள் சபைக்குள் அனுமதிக்க மறுத்து, பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி வேதபூர்வமானது என்று நிரூபித்த சர்ப்பத்தின் வித்து, நித்திய பாதுகாப்பு போன்றவைகளை பிரசங்கிக்க அனுமதியளிப்பதில்லை. அது தவறென்று என்னிடம் வந்து நிரூபிக்க நான் சவாலுக்கு மேல் சவாலிட்டிருக்கிறேன். 141. அவர்கள் எதைப் பெற்றுள்ளனர்? லூத்தரும் மற்றவர்களும் பெற்றிருந்த அதேக் காரியத்தையே, பாருங்கள், எகிப்தியனைக் கொன்று போடுதல். என்ன...அது என்னவாயிருந்தது? ஒருக்கால் அது ஒரு மனிதனை தன் திருட்டுத்தனத்திலிருந்து திருப்பியிருக்கக் கூடும் அல்லது தன் மனைவிக்கு உண்மையாய் வாழும்படி செய்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் அவனை என்ன செய்து விட்டீர்கள்? “எங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி ஒரு சபை அங்கத்தினனாக்கிவிட்டீர்கள். பார்த்தீர்களா? 142 . மோசே தான் பெற்றிருந்த நாற்பது ஆண்டுகால பயிற்சியின் வெற்றியாய் மரித்து நாற்றமெடுத்த ஒரே ஒரு மனிதனை மாத்திரம் சுட்டி காண்பிக்க முடிந்தது. மரித்து, அழுகி, நாற்றமெடுத்த ஒரே ஒரு எகிப்தியனை. 143 . இன்றிரவும், ஏறக்குறைய அதேவிதமாயுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள எழுப்புதல் கூட்டங்களின் (அவ்வாறு அழைக்கப்படுகின்ற) விளைவாக நாம் சுட்டிக் காட்டக் கூடிய ஒன்றே ஒன்று, எகிப்தின் இரவைக் குறித்து எவ்வாறு ஆப்பிரிக்கா பழங்குடியினர் அறிய முடியவில்லையோ, அவ்வாறு தேவனை அறியாத நாற்றமெடுத்த ஒரு கூட்டம் சபை அங்கத்தினர்களை மாத்திரமே. அது உண்மையே. அதாவது தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவர்களிடம் கூறிப் பாருங்கள், அப்பொழுது அவர்களோ, “நான் அதை விசுவாசிக்கிறதில்லை” என்பார்கள். மேலும், “நீங்கள் என்னக் கூறினாலும் நான் கவலைப்படமாட்டேன். நான் அதை விசுவாசிப்பதில்லை” என்கின்றனர். பார்த்தீர்களா? புரிகிறதா? நாம் பட்ட சிரமங்கள், போராட்டங்கள் மற்றும் நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தின் விளைவாய் சுட்டிக் காட்டக் கூடியதோ அந்த பயங்கரமான காரியமே. 144. ஒருக்கால் நாம் பெரிய வேதாகமப் பள்ளியைப் பெற்று அதைச் சுட்டி காட்ட முடியும். ஆனால் அது மரித்துவிட்டது. நாம் ஒரு ஸ்தாபனத்தை சுட்டி காட்ட முடியும். அது மரித்துவிட்டது. அது நாற்றமெடுத்துக்கொண்டிருக்கிறது. நாம் முதலில் எதை விட்டு வெளி வந்தோமோ, அது தான் அது. “நாய் தான் கக்கினதைத் தின்னவும் பன்றி சேற்றிலே புரளவும் திரும்பிச் செல்வது போன்றது அது." ஒரே ஒரு மரித்த எகிப்தியன். 145 . யாராகிலும், "மோசே, பார், ஜனங்களுக்கான உணர்வையே நீர் பெற்றிருக்கவில்லையா? நீ இதைச் செய்ய அழைக்கப்பட்டாய்” என்று கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. மோசேயை அறிந்த யாராவது அதற்கென்று மோசே அழைக்கப்பட்டதை அவர் அறிந்திருப்பர். “ஜனங்களின் மேல் கொண்டிருந்த பரிதாபத்தை இழந்து விட்டீர்களா?” “இல்லை, ஐயா.' 146. "பாருங்கள், பின்னே ஏன் நீங்கள் போய் அதைச் செய்ய கூடாது. நீங்கள் ஏன் இதை முயற்சி செய்யக்கூடாது? நீங்கள் ஏன் மற்றவர்களுடன் கலந்து கொள்ளக் கூடாது?” 147. மோசே அங்கு எரிகிற முட்செடியின் அனுபவத்தைப் பெற்று, “நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன். நான் அவர்களை விடுவிக்க இறங்கி வந்துள்ளேன். அதைச் செய்ய நான் உன்னை அனுப்புகிறேன்” என்னும் அந்த வார்த்தையை அது பிரகடனம் செய்யும் வரைக்கும் அவனிலிருந்த மற்றெல்லாம் களையப்பட வேண்டியதாயிருந்தது. அதுதான் அது. 148 . அவன் வார்த்தையைக் கண்டான், அது ஜனங்களின் சுய ஆசையோ அல்லது ஜனங்களின் வாஞ்சையோ இல்லை. அதன் பிறகு மோசே என்னவானான்? அவன் எகிப்தியர்களை சந்திக்க விரும்பவில்லை, இந்த காரியத்தை அவன் இனி ஒரு போதும் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் அவன் ஒரு சிறைவாசியானான். ஆமென். நாற்பது வருடங்களாக அவனிலிருந்தவை களையப்பட்டு, அதன்பிறகு அவன் எரிகின்ற முட்செடியில் ஒரு சிறைவாசியாயிருக்கிறான், தன்னுடைய அறிவுத்திறன் யாவற்றோடுங்கூட மகத்தான மோசே. எகிப்தில் மோசே வார்த்தையிலும் செய்கையிலும் வல்லவனாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. 149. அந்த வல்லமையான வேத சாஸ்திர நிபுணன் எரிகிற முட்செடியின் பிரசன்னத்தில் என்ன செய்தானென்று கவனியுங்கள். அவன் தன்னுடைய இயலாமையை மாத்திரமே அறிக்கையிட்டான். அவன் தேவனுடைய உண்மையான நோக்கத்தைக் கண்டபோது, அவன் அதை செய்ய இயலாதென்று அறிக்கையிட்டான். இருப்பினும் அவன் தன்னால் பெற முடிந்த வேத சாஸ்திரம் எல்லாவற்றிலும் பயிற்றுவிக்கப்பட்டிருந்தான். அவன் மிகச் சிறந்த பள்ளிகளில் பயிற்சி பெற்றான். ஆனால் அதே சமயத்தில் அக்கினி ஸ்தம்பம் அந்த முட்செடியில் தொங்கினபோது, அவனால் என்ன செய்ய முடிந்தது?...அவன், “என்னால் பேசவும் கூட முடியவில்லை. உ -ஊம். ஆண்டவரே, நான் போவதற்கு எம்மாத்திரம்?” என்றான். பார்த்தீர்களா? 150. "மோசே, உன் பாதரட்சைகளைக் கழற்றிப் போடு, உன்னோடு நான் பேச வேண்டும். உன்னுடைய பாதரட்சையை கழற்றிப்போடு. நீ —நீ தரையிலே மறுபடியும் சாஷ்டாங்கமாய் பணிந்துகொள். நான் உன்னிடத்தில் பேச வேண்டும்” 151 . அவனால் பேச முடியவில்லையே. முடிவிலே தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சிறைவாசியாக, தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக அந்தவிதமாகவே பவுல் தெரிந்து கொள்ளப்பட்டான். மோசே மீட்கிறவனாக தெரிந்து கொள்ளப்பட்டான். முடிவில் தேவன் தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய பிரஜையை அவருக்கென ஒரு சிறைவாசியாக்குகிறார். ஓ, அல்லேலூயா! தேவனுடைய வார்த்தை அவனைப் போகச் சொன்னபோது மாத்திரம் அவன் போனான். “என்னை அனுப்பினது யார் என்று சொல்லுவேன்?” "இருக்கிறேன் என்பவர்” என்று கூறு. “அதை எப்படி நான் செய்வேன்?” “நான் உன்னோடு கூட இருப்பேன்” 152. “சரி, ஆண்டவரே, நீர் சொன்னபடியே செய்வேன். இதோ நான் இருக்கிறேன்." ஓ, என்னே! அது தான், அவன் ஒரு சிறைவாசியாயிருக்கிறான். 153. அவன் தன்னுடைய மேலான சிந்தனைக்கு விரோதமாக செல்கிறான். அவன் இராணுவத்தை கட்டளையிட்டு நடத்த பயிற்சி பெற்றிருந்தான். “உருவின பட்டயங்களை, மேல் நோக்கியவாறு எதிர்த்துப் போரிட, அதாவது எல்லா இரதங்களும் ஒழுங்காக சென்று, ஈட்டிகளால் தாக்க, கட்டளையிட” அவ்வாறு புறப்பட்டு செல்ல பயிற்சி பெற்றிருந்தான். அப்படித்தான் அதைக் கைப்பற்ற அவன் எண்ணம் கொண்டிருந்தான். அதுவேஅவனுடைய பயிற்சியாயிருந்தது. ஆனால் அவன் கர்த்தரிடம், "நான் எதை உபயோகிக்க வேண்டும்?” என்று கேட்டான். அவர், “உன் கையில் என்ன இருக்கிறது?” என்றார். 154. “ஒரு கோல்!” என்றான். சில சமயங்களில் தேவன் மனித அறிவுக்கு கேலித்தனமாய் காணப்படும் காரியங்களைச் செய்கிறார். புரிகிறதா? அவனுடைய கையில் ஒரு கோல் இருந்தது. கன்ன மீசை தொங்கிக் கொண்டிருந்தது. எண்பது வயது வயோதிகன். தன் மனைவியை கழுதையின் மேல் ஏற்ற, அவளோ குழந்தையை அவளுடைய இடுப்பில் வைத்துக் கொண்டாள். வயோதிக தசைகள் தொங்கிக் கொண்டிருந்த கரத்தில் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு, அப்படியே தலையை நிமிர்ந்து நடந்தான், ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டவனாய் இருந்தான். ஏன்? அவன் முடிவிலே நங்கூரமிடப்பட்டிருந்தான். 155 . அவன் ஒரு சிறைவாசியாயிருந்தான். "வார்த்தை போகச் சொல்லும்போது மாத்திரமே நான் செல்வேன். வார்த்தை பேசும்போது மாத்திரம் நான் பேசுவேன்." “நீ எங்கே போகின்றாய்?” 156. “நான் ஒரு கட்டளை பெற்றிருக்கிறேன். தேவன் என்னை அனுப்பின பார்வோனின் முன்னால் நின்று, இந்தக் கோலை அவனுக்கு காண்பிக்க வேண்டும்.” ஆமென். “இதன் பிறகு நீ என்ன செய்யப்போகின்றாய்?” "நான் இதை செய்த பிறகு, அவர் அடுத்த காரியத்தை அருளுவார்.” 157. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. இன்றிரவு முதல் அடியாக, நீங்கள் செய்யும்படி ஒரு காரியத்தை மாத்திரமே பெற்றுள்ளீர்கள்: அர்பணித்து, ஒரு சிறைவாசியாதல். உன்னைக் குறித்தோ அல்லது வேறொன்றைக் குறித்தோ எண்ண வேண்டாம். ஒரு சிறைவாசியாகிவிடு. 158. மோசே ஒரு சிறைவாசியானான், அவனால் பேச கூட முடியவில்லையென்று அறிக்கை செய்தான். முடிவில் தேவன் போகச் சொன்னால் மாத்திரமே அவனால் போக முடிந்தது. அவர் வார்த்தையை அவனிடம் கூறினார். அது வார்த்தையென்று அவன் அறிந்து கொண்டான். அப்பொழுது அவன் தன்னை வார்த்தைக்கு ஒப்புக்கொடுத்தான். பரிசுத்த ஆவியானவர் அங்கே மோசேயை தேவனுடைய சித்தத்துக்கு சேனம் பூட்டினர். 159 . அதேக் காரியத்தை அவர் பவுலுக்கும் செய்தார். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அவர் பவுலுக்கு சேணம் பூட்டினார்; சிறிய கோணலான மூக்கு கொண்ட, கிண்டலான யூதன், ஓ, அவன் தத்துவ மற்றும் எல்லா பாண்டித்தியப் பட்டங்களையும் பெற்றிருந்தான். ஆனால் அவர், "அவன் வார்த்தையின் நிமித்தமாக எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். பார்த்தீர்களா? அவன்... 160. பவுல் அங்கு உட்கார்ந்து கொண்டு வார்த்தையைக் கண்டு, அது இயேசுவென்று அறிந்து கொண்டான். அவன் தன் கரங்களையுயர்த்தி அவருக்கு சேணம் பூட்டப்பட்டவனானான். தேவனுடைய அன்பு அவனை வார்த்தைக்கு சேணம் பூட்டிவிட்டது. “அவன் புறஜாதிகளுக்கு முன்பாக என் நாமத்தை அறிவிப்பான்." அவன் புறப்பட்டு சென்றான். 161. "CLDITCF, நான் உன் பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். நான் அவர்களுக்கு வாக்களித்தேன் என்பதை நினைவு கூருகிறேன், வாக்குத்தத்தத்தின் நேரம் வந்து விட்டது. என் ஜனங்களின் உபத்திரவத்தை நான் காண்கிறேன். என் வாக்குத்தத்தத்தை நான் நினைவு கூருகிறேன். உனக்கு சேணம் பூட்ட நான் இறங்கி வந்திருக்கிறேன். வார்த்தை என்ன கூறுகிறதென்று உனக்குத் தெரியும். நீ அங்கு போவதற்காக நான் உன்னைச் சேணம் பூட்டியுள்ளேன், என் ஜனங்களை விடுவிப்பதற்கென உன்னை அங்கு அனுப்ப வல்லமையினால் உன்னை சேனம் பூட்டினேன். உன் கையில் அந்த கோலை ஒரு சாட்சியாக எடுத்துக் கொண்டு போ, ஏனெனில் அதனால் நிகழ்த்தப்பட்ட ஒரு அற்புதத்தை நீ கண்டாய்” என்றார். தாவீது கவணோடு சென்றது போன்றே. புரிகிறதா? 162. அவன் தன்னை சேணம் பூட்டிக் கொண்டு அங்கு சென்றான். முடிவில் தேவன், தனக்கு கீழ்படிந்த ஒருவனை, அவருக்கு சேணம் பூட்டப்பட்ட ஒருவனைப் பெற்றார். தேவனுடைய வார்த்தை அவனைப் போகச் சொன்னாலொழிய அவனால் போக முடியவில்லை. இன்றைக்கு ஜனங்கள் மாத்திரம் அதையே செய்தால், நலமாயிருக்குமே! அப்பொழுது அவன் அவருடைய சிறைவாசியாயிருந்தான், ஒரு அன்பின் சிறைவாசியாய், அன்பின் கட்டில் தேவனோடு நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தான், பவுல் தேவனுக்கென்று அன்பின் கட்டில் நுகத்தில் பிணைக்கப்பட்டான். 163. பவுலைப் போன்றே, அவர்கள் இருவரும் ஒரேவிதமாக பயிற்சி பெற்றிருந்தனர். இஸ்ரவேல் ஜனங்களை இராணுவ பலத்தினால் விடுவிக்க மோசே பயிற்சி பெற்றிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பவுல் அக்காலத்தில் உலகிலிருந்த பெரிய மார்க்க சக்தியின் மேலும், ரோமருடைய கைகளிலிருந்து அவர்களை விடுவித்து சுயாதீனராக்கவும் பயிற்சி பெற்றிருந்தான். கமாலியேலின் கீழ் பயிற்சி அளிக்கும் பெரிய பள்ளியிலிருந்து வந்திருந்தான். 164. இருவரும் வனாந்திரத்துக்கு சென்று வித்தியாசமான மனிதர்களாய் திரும்பி வந்தனர். இருவரும் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டனர். இருவரும் தீர்க்கதரிசிகள்! அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.) இருவரும் தீர்க்கதரிசிகள். இருவரும் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து பேசப்படுவதைக் கேட்டனர். அது முற்றிலும் உண்மை. இருவரும் விடுவிப்பதற்கென தோன்றினர். இருவரும் வனாந்திரத்துக்கு சென்றனர். தங்கள் வீடுகளை விட்டுவிட்டு வனாந்திரத்திற்குச் சென்று கண்டறிய, தங்களுடைய ஜனங்களையும் மற்ற எல்லாவற்றையும் விட்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளச் சென்றனர். புரிகிறதா? 165. அவர்கள் ஒரேவிதமான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனால் தேவனோ அவர்களை வேறுவிதமாக மாற்றினார். அவர்கள் முற்றிலும் ஒரு சிறைவாசிகளாகி, அவர்கள் விருப்பப்படி நடவாமல், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதேவிதமாக நடந்தனர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 166. இவைகளைக் கூற நமக்கு இன்னும் பத்து நிமிடங்கள் கிடைக்குமா? [சகோதரன் நெவில், “ஆமென்” என்கிறார்-ஆசி.) 167 நான் இன்னும் மற்றொரு குணாதிசயங்கொண்ட நபரைக் குறித்து துரிதமாகக் கூறவுள்ளேன். இப்பொழுது அந்த ஒருவர் என் கண் முன் தோன்றுவதை நான் காண்கிறேன். அவனுடைய பெயர் யோசேப்பு. அவன் தெரிந்து கொள்ளப்பட்ட குமாரன். அவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பரிபூரண முன்னடையாளமாகத் திகழ்ந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாகப் பிறந்தான். அவனும் ஒரு தீர்க்கதரிசியாயுங் கூட இருந்தான். புரிகிறதா? அவனால் தரிசனங்களைக் காண முடிந்தது. அவன் ஒரு சிறுவனாயிருந்தபோதே, அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து, அவனுடைய சகோதரர்கள் அவனை வணங்குவது போல் தரிசனம் கண்டான். பார்த்தீர்களா? ஆனால் கவனியுங்கள். அவன்...அவன் ஒரு பெரிய நபரயிருந்ததாக நினைத்துக் கொண்டான். புரிகிறதா? அவர்கள் எல்லாருமே... 168. ஆனால் தேவன் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர் மற்றவர்களுக்கு செய்திருந்த அதேக் காரியத்தையே செய்தார். ஏனெனில் மோசே ஒரு மீட்கிறவனாயிருந்தான். பவுல் ஒரு மீட்கிறவனாயிருந்தான். இப்பொழுது யோசேப்பும் ஒரு மீட்கிறவனாயிருந்தான். அவன் தன் ஜனங்களை பஞ்சத்திலிருந்து இரட்சித்தான். 169 . தேவன் அவனுக்கு என்ன செய்ய வேண்டியிருந்தது? அவனை சிறையில் அடைக்க வேண்டியிருந்தது. நேராக சிறையில் அவனை வைத்தார். ஆம், ஐயா. அவன் தன் சகோதரர்களால் ஒரு எகிப்தியனுக்கு விற்கப்பட்டான் என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் அவனை போத்திபாருக்கு விற்றனர். போத்திபார் அவனுக்கு சிறிது சுதந்திரம் கொடுத்திருந்தான். முதலாவது காரியம், என்ன தெரியுமா? அது அவனை விட்டு எடுக்கப்பட்டது. அவன் அழுது கொண்டே சிறையில் அமர்ந்திருந்தான். தேவன் அதைக் களைய வேண்டியதாயிருந்தது. 170 . இப்பொழுது இதை கவனியுங்கள். அவன் காவலில் இருந்தபோது, அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து அவனுடைய சகோதரர் அவனை வணங்குவது போல் அவன் கண்ட தரிசனம் அவன் நினைவில் எப்பொழுதும் இருந்திருக்கும் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் அது அவன் தேவனிடத்திலிருந்து பெற்ற வரம் என்றும் அறிந்திருந்தான். அது நிறைவேற வேண்டியதாயிருந்தது என்றும் அவன் அறிந்திருந்தான். 171. நாம் அதை நம்முடைய சிந்தையில் கொண்டவர்களாக மாத்திரம் இருந்தால், அதாவது தேவனுடைய வார்த்தையின்படி இந்தக் கடைசி நாட்களில் அவர் ஒரு சபையை பெற்றுக் கொள்ளப் போகிறார் என்றும், அவர் ஒரு கூட்டம் ஜனங்களை பெற்றுக் கொள்ளப் போகிறார் என்றும் அறிந்துகொண்டால் நலமாயிருக்குமே. இந்தக் காரியங்களை அவர் வாக்குப்பண்ணினபடியால், அவர் அவைகளை நிறைவேற்றப் போகிறார். அவர் அதைச் செய்வதாகக் கூறினார். நாம் அந்த நேரத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அங்குதான் இருக்கிறோம். அவர் நம்மை உண்மையான சிறைவாசிகளாக்கும்படிக்கே, அவருடனே உள்ளில் பூட்டப்பட்டிருக்கச் செய்யும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 172. "நான் தேவனுடன் அடைக்கப்பட்டிருக்கிறேனா?” என்று நீங்கள் பாடும் அந்த பழைய பாடலை நீங்கள் கேட்கிறீர்கள். நான் தேவனுடன் உள்ளே அடைக்கப்பட விரும்புகிறேன். இதைக் குறித்தே நான் சிந்தித்தேன். தேவனுடன் உள்ளே அடைக்கப்பட்டிருத்தல், வேறொன்றும் செய்ய முடியாது. தேவன் போகச் சொல்லுகிறபோது மாத்திரம் நீங்கள் போக முடியும். தேவன் செய்ய சொல்கிறதை மாத்திரமே நீங்கள் செய்ய முடியும். பாருங்கள், அப்பொழுது நீங்கள் தேவனுடன் உள்ளே அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். 173. இப்பொழுது நினைவிருக்கட்டும், அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் தானே முற்றிலும் ஒரு தோல்வியடைந்தவனாகிவிட்டான். அவன் அறிந்திருந்த அனைத்தும், அவனுக்கு புரிந்த அனைத்தும், ஒவ்வொன்றும், அவன் முழு தோல்வியடைந்தவனானான். அது கிரியை செய்யவில்லை. அவன் சொல்வதையோ யாருமே கேளாத சூழ்நிலையில் அவன் வைக்கப்பட்டுவிட்டான். அவன் ஒரு சிறைவாசியாயிருந்தான். புரிகிறதா? அவிசுவாசிகள் அவனை விசுவாசிக்காத ஒரு சூழ்நிலையில் அவன் வைக்கப்பட்டான். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அவனுடைய ஊழியம் அவமாய் போய்விட்டது. ஜனங்கள் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொண்டனர். அவன் காவலில் இருந்தபோது யாருமே அவன் மேல் கவனம் செலுத்த விரும்பவில்லை. அவனுடைய ஊழியம் இனி என்ன நன்மையை செய்யும்? சிறைக் கம்பிகளின் பின்னால் நின்று கொண்டு அவன் பிரசங்கம் செய்திருக்கக் கூடும். அவர்களோ கேளாமல் அங்கிருந்து நடந்து சென்றிருப்பார்கள். பாருங்கள்? ஆயினும் அவன் ஒரு சிறைவாசியாகிவிட்டிருந்தான். சரியான நேரம் வரைக்கும் தேவன் அவனை ஒரு சிறையில் வைத்திருந்தார். "இதோ என்னுடைய மனிதன் இருக்கிறான்” என்றார். மகிமை! முழு தோல்வி! 174. முடிவிலே தேவன் அவனண்டை அவனுடைய சிறைக்கு வந்தார். அவர் பவுலிடமும் மற்றவர்களிடமும் வந்தது போல, அவர் யோசேப்பிடம் வந்தார், அவனை அங்கிருந்து வெளியே கொண்டு வர, அவர் அவனுக்கு அளித்திருந்த வரத்தை உபயோகித்தார். அது உண்மை. அவர் அவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவன் என்ன செய்தான்? அவர் அவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தவுடனே, அவனுக்கு ராஜாவினால், தன்னுடைய ராஜாவினால் அதிகாரம் அளிக்கப்பட்டு, அவன் யாருக்கு கீழ் அடங்கியிருந்தானோ, அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் சிறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, அவன் சொன்னதெல்லாம் நிறைவேறத்தக்கதாக, அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆமென். 175. அவன் ஒரு நோக்கத்துக்காக பிறந்தான் என்று எப்பொழுதும் அவன் மனதில் கொண்டிருந்தவனாய் அவனுடைய சிறையில் இருந்தான். அவன் ஒரு ராஜாவின் அருகில் உட்காரப் போவதாயிருந்தான். மற்றவர் எல்லாரும் அவர்களுடைய முழங்கால்களை முடக்கி அவனை வணங்கப் போவதாயிருந்தது. அப்படித்தான் அவன் கண்ட தரிசனம் உரைத்தது, ஆமென். ஆனால் அவனுடைய தரிசனம் முழுவதுவாக நிறைவேறுவதற்கு முன்பு, அவன் ஒரு சிறைவாசியாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஆமென்! அதன் பிறகு அவன் ஆளுமை செய்பவனானான். அவன் தன்னுடைய சிறையை விட்டு வெளியே வந்து தேவனுடைய வார்த்தைக்கு ஒரு சிறைவாசியாகி, தேவன் அவன் வாயில் கூறும்படி போடுகிறதை மாத்திரம் அவனால் கூற முடிந்தது. அப்பொழுது தேவன் அவன் முலம் அசைவாடினார். 176 . கவனியுங்கள், பார்வோனின் இளவரசர்களை தன் விருப்பப்படி கட்ட மோசேக்கு அதிகாரம் இருந்தது. “நீங்கள் இந்த மலையைப் பார்த்து: 'பெயர்ந்து போ என்று சொல்ல” பார்வோனின் இளவரசர்களைக் கட்ட அவனுக்கு அதிகாரம் இருந்தது. அவர்கள் உதவிக்காராக இருந்தாலும், அல்லது திருச்சபை மூப்பராக இருந்தாலும், அல்லது அவர்கள் மாகாணப் பிரதிநிதிகளாயிருந்தாலும், அல்லது அவர்கள் யாராயிருந்தாலும், சரி. அவன் “நான் உங்களைக் கட்டுகிறேன்” என்று சொல்லும்போது, அவர்கள் கட்டப்பட்டனர். அவ்வளவுதான். அவன் தன் சொந்த வார்த்தையை உரைத்து, தன் சித்தப்படி அதை செய்ய முடிந்தது. ஆமென்! தேவனுக்கு மகிமை! ஓ, நான் கூறியதைக் காத்துக் கொள்ள, எனக்கோ இன்னும் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் மாத்திரமே உள்ளன. 177. அவன்—அவன் ஒரு உலகத்திற்கு சிறைவாசியாயிருப்பதிலிருந்து, தேவனுக்கு ஒரு சிறைவாசியானான் என்று நாம் கண்டறிகிறோம். பவுலுக்கும் அதேவிதமாக சம்பவித்தது, மோசேக்கும் அதே விதமாக சம்பவித்தது. தன் சொந்த கருத்துக்கு ஒரு சிறைவாசியாயிருப்பதிலிருந்து தேவனுக்கு ஒரு சிறைவாசியாதல். யோசேப்பு வெளியே வந்தபோது, அவன் தேவனுடைய வல்லமையைப் பெற்றிருந்தான். சவுல் பவுலான போது... மோசேயின் சொந்த கருத்து.அவன் அதை தேவனிடம் சமர்ப்பித்து, அது அவனை விட்டு களையப்பட்டது. அவன் கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு ஒரு சிறைவாசியானான். எங்கெல்லாம் போக மாத்திரம் முடியுமோ... நீங்கள் “கிறிஸ்துவா”? என்று கேட்கலாம். 178. “அவன் எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.” எனவே பவுல் இருந்ததைப் போன்றே அவன் கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாயிருந்தான். 179 . அவர்கள் மூவரும் தீர்க்கதரிசிகளாயிருந்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். புரிகிறதா? அவர்கள் தேவனுடைய சித்தத்துக்கும் அவருடைய வழிகளுக்கும் ஒரு சிறைவாசிகளாவதற்கென, தங்கள் சொந்த கருத்துக்கள் அவர்களை விட்டுக் களையப்பட வேண்டியதாயிருந்தது. 180 . அதன்பின்னர் அவனுக்கு தன் சொந்த வார்த்தையினால் கட்ட அதிகாரம் இருந்தது என்பதை நாம் ஞாபகம் கொள்ள வேண்டும். அவனுக்கு தன் சொந்த வார்த்தையினால் கட்டவிழ்க்கவும் அதிகாரம் இருந்தது. அவன், “என் ராஜாவின் நாமத்தினாலே நான் உன்னை கட்டவிழ்க்கிறேன்” என்று கூறியிருக்க முடியும். ஆமென்! பார்வோன் யோசேப்பை தன் குமாரனாக்கிக் கொண்டான். 181 . கிறிஸ்துவும் அன்பின் சிறைவாசிகளை, தமது குமாராக்கி, தம்முடையவர்களாக்கிக் கொண்டார். அவருக்கிருந்த அதே வல்லமையே அவர் அவர்களுக்களிக்கிறார். பரிசுத்த யோவான் 14:12-ல் “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வான்.” என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள். கிறிஸ்துவின் அன்பினால் சிறைவாசியானவனுக்கு தன்னுடைய ராஜாவாகிய கிறிஸ்துவினால் அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆமென். “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து 'நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ' என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால். நீங்கள் என்னுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருந்தால்,” ஏனெனில் அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றே. "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்..." இங்கும் அங்கும் அல்ல, “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அல்லது நீங்கள் உரைப்பது எதுவோ, அது உங்களுக்கு செய்யப்படும்." அவன் வல்லமையை உடையவனாயிருந்தான். 182 . கவனியுங்கள், யோசேப்பு சிறையை விட்டு வெளியே வருவதற்கு முன்பு, அவன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, சவரம் பண்ணப்பட வேண்டியவனாயிருந்தான். அவன் தன்னுடைய ராஜாவை சந்திக்கும் முன்பு சில காரியங்கள் அவனிலிருந்து சவரம் பண்ணப்பட வேண்டியிருந்தது. புரிகிறதா? 183. ஓ, தேவன் சில நேரங்களில் தம்முடைய பிள்ளைகளை அந்த விதமாக வெளியே கொண்டு போய், அவர்களுடைய சுய சித்தங்கள் சிலவற்றை சவரம் பண்ணுகிறார். அதன் மூலம், அவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினதை அவர்கள் செய்ய முடியாது என்பதைக் காண்பிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்புவதை செய்வதற்கு அவர்களுக்கு—அவர்களுக்கு சுயாதீனம் கிடையாது. அவர்கள் முழு அதிகாரத்துக்குள் வந்து கிறிஸ்துவின் அன்பின் அடிமைகளாவதற்கு முன்பு, அவர்கள் சவரம் பண்ணப்பட்டு அவர் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும். சில சமயங்களில் அப்படி செய்ய, அவர்களுக்கு சவரம் செய்ய அவர் அவர்களை வனாந்தரத்துக்கு கொண்டு செல்கிறார். அதன்பின்னர் அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்களை அவர் நியமித்திருந்த நோக்கத்தை நிறைவேற்ற அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக்குகிறார். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிந்து கொள்கிறீர்களா? சகோதர்களே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 184. மற்றெல்லா காலங்களிலும் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் எப்பொழுதுமே ஒரு மனிதனை தெரிந்து கொண்டு அவனைத் தமக்கு ஒரு சிறைவாசியாக்கும்படி செய்ய, அவன் தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் கைவிட வேண்டியதாயுள்ளது. அவன் தேவனுடைய சித்தத்தை முறைப்படி அறிந்து, தேவனைப் பின்பற்ற, அவன் அறிந்த எல்லாவற்றையும், தான் பெற்றிருந்த பயிற்சி அனைத்தும் மறந்து கைவிட்டுவிட வேண்டியதாயிருந்தது. 185. அவன் ஒரே நேரத்தில் மனிதன் செய்ய வேண்டிய காரியத்தையும், தேவன் செய்ய வேண்டிய காரியத்தையும் பின்பற்ற முடியாது. அவை ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன. நீங்கள் ஒரே நேரத்தில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்ல முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் இடது பக்கமும் வலது பக்கமும் செல்ல முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் சரியானதையும் தவறானதையும் செய்ய முடியாது. நீங்கள் ஒரே நேரத்தில் தேவனையும் மனிதனையும் பின்பற்ற முடியாது. இல்லை, ஐயா. நீங்கள் ஒன்று தேவனைப் பின்பற்ற வேண்டும் அல்லது மனிதனைப் பின்பற்ற வேண்டும். 186. ஆகையால், இப்பொழுது நீங்கள் தேவனைப் பின்பற்ற தேவனுக்கு உங்களை ஒப்புவித்திருந்தால், அப்பொழுது நீங்கள் அந்த தேவனுக்கு, அந்த வார்த்தைக்கு, அந்த சித்தத்துக்கு ஒரு சிறைவாசியாகிவிடுகிறீர்கள். யார் என்ன கூறின போதிலும் கவலைப்படாமல் நீங்கள் அதற்கு ஒரு-ஒரு சிறைவாசியாகிவிடுகிறீர்கள். 187. கவனியுங்கள், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். விரைந்தோடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தின் கடைசி இரண்டு நிமிடங்களுக்கு முன்பு நான் இதை பயபக்தியுடனும் மரியாதையுடனும் கூற விரும்புகிறேன். பாருங்கள். இந்தக் கடைசி நாட்களில் தேவன் செய்யப் போவதும், அவசியம் செய்ய வேண்டியதும் என்னவெனில், அறுப்புக்காக அவர் ஒரு கருவியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தாகும். அவர் களத்தைப் போரடிக்க ஒரு கருவியைத் தெரிந்து கொள்ள வேண்டும். அறுப்புக்காக செல்லும் எந்த விவசாயியும் அதைச் செய்ய ஒரு கருவியை அவன் உடையவனாயிருக்க வேண்டும்; நிச்சயமாக, தானியத்தை அடித்துப் பிரிக்க ஒரு கூர்மையான அரிவாள் அல்லது ஏதோ ஒன்று, ஒரு கருவியை அவன் உடையவனாயிருக்க வேண்டும். அறுப்புக்கு விளைந்து ஆயத்தமாயுள்ளது. 188. தேவனே, உமது கரங்களில் எங்களை எடுத்துக் கொள்ளும். உமது அன்பின் ஊழியக்காரராக எங்களை ஆக்கிக் கொள்ளும். நாங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பாவமுள்ள, சபிக்கப்பட்ட உலகத்துக்கு, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் மெய்யான உணர்வைக் கொண்டு வர எங்களைக் கருவிகளாக உபயோகித்தருளும். 189. என்னைப் பொருந்த வரையில், தேவனே நான் ஒரு சிறைவாசியாக இருக்கட்டும். என் சகோதரர் அனைவரும் என்னைப் புறக்கணித்தாலும், என் நண்பர் அனைவரும் என்னை புறக்கணித்தாலும், நான் இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் ஒரு சிறைவாசியாகவே இருக்க விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியினால் அவருடைய வார்த்தைக்கு சேனம் பூட்டப்பட்டு, அவர் என்னென்ன நடக்கும் என்று உரைத்திருக்கிறாரோ, அதே காரியங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதைக் காண வாஞ்சிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாயிருக்க விரும்புகிறேன். நாம் ஜெபம் செய்வோமாக. 190. நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருப்பதோடு, நாம் கொண்டுள்ள அந்த பேராசையை, ஏதோ ஒன்றாயிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒன்றாக இருக்கலாம் என நாம் சிந்திப்பதை, ஒரு சுயநல காரியத்தை, இவைகளை நாம் ஒரு புறம் தள்ளி வைக்க முடியாதா என்று இன்றிரவு நான் எதிர்பார்க்கிறேன். 191. இன்றிரவு இங்குள்ள யாரோ ஒரு சிறு பையன், சுற்றும் முற்றும் பார்த்து, “நான் பெரியவனாகும்போது, நான் இப்படி—இப்படி இருக்கப்போகிறேன். நான் அவ்வாறிருக்கப் போகிறேன்” என்று கூறுவானோ என்று நான் ஐயமுறுகிறேன். தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்க்கையில் அசைவதை நீங்கள் உணர்ந்து “இல்லை, இல்லை. உ -ஊ. என்--என்...சுய ஆசைகள் அனைத்தையும் இப்பொழுது இழந்துவிட்டேன். கடந்த சில நாட்களாக பரிசுத்த ஆவி என்னுடன் பேசிக்கொண்டு வருகிறார். இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய போரடிக்கும் (threshing) கருவியாக நான்—நான்— நான்—நான் இருக்க என்னையே அவருக்கு ஒப்பிக்கொடுக்க விரும்புகிறேன்” என்று கூற முடியுமா என்று எதிர்பார்க்கிறேன். 192. இங்குள்ள வாலிபப் பெண்ணாயிருந்தாலும், ஒரு அருமையான நற்பண்புள்ள பெண்ணாக ஆக வேண்டும், அல்லது—அல்லது அழகான பெண்ணாக வர வேண்டும் என்னும் எண்ணமுற்றிருந்தால், உங்கள் சுய ஆசைகள் அனைத்தையும் தேவனுடைய சமூகத்திலும், அவருடைய வார்த்தையின் சமூகத்திலும் ஒப்புக்கொடுக்க விருப்பமில்லாமலிருந்தால், தேவனுடைய அழைப்பிற்கு உங்கள் வாழ்க்கையில் செவி கொடுப்பீர்களா என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் யாரென்று தேவன் அறிவார். 193. நான் எதிபார்ப்பதோ, இங்கு சபையில் எங்காகிலும் ஒரு போதகரோ அல்லது ஊழியக்காரரோ, ஒரு பணியாளோ எங்கோ இருக்க நேர்ந்தால், நான் எப்பொழுதாவது ஒரு முறை இங்கு வருகிறேன். இன்றிரவு இங்கு உட்கார்ந்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரைக் கூட எனக்குத் எனக்குத் தெரியாது. ஆனால் நான்—நான் ஒரு சிலரை மாத்திரமே அறிவேன். அப்படிப்பட்ட நபர் யாராவது இங்கிருக்க நேர்ந்து, "யார் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. நான் இப்பொழுது தேவனுக்கு அடிமை. என்ன நேரிட்டாலும் நான்-நான்-நான் தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பிரசங்கிக்கப் போகிறேன். என்—என் ஸ்தாபனம் என்னை வெளியே அனுப்பினாலும் எனக்குக் கவலையில்லை. நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன். நான்—நான் அதையே செய்யப்போகிறேன். என் சித்தமே தேவனுடைய சித்தம். தேவனுடைய சித்தமே என் சித்தம். நான் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு சிறைவாசியாக இருக்க விரும்புகிறேன். அவருடைய கிருபையினாலும் ஒத்தாசையினாலும், நான் அதை செய்வேன்” என்று கூற விரும்புவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். 194 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், அதைக் குறித்து யோசித்துப் பாருங்கள். இன்றிரவு எத்தனை பேர் அந்த ஆவலை உடையவர்களாயிருக்கிறீர்கள்? நீங்கள் உங்களுடைய கரங்களையுயர்த்துங்கள். என் கரத்தையும் கூட உயர்த்துகிறேன். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். நமது தலைகள் வணங்கியிருப்பதோடு, இப்பொழுது, இதை நீங்கள் சிந்தித்து, நீங்கள் ஜெபிக்கையில், இப்பொழுது மெல்ல பாடுவோம். நாம் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, எல்லாவற்றையும் உமக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான்...ஒப்புவிக்கிறேன். 195. நீங்கள் உண்மையாகவே அதை பொருட்படுத்திக் கூறுகிறீர்களா? "நான் ஒரு சிறைவாசியாயிருக்க விரும்புகிறேன். நான்..., கர்த்தாவே, என்னை ஏற்றுக் கொள்ளும். என்னை இன்றிரவு குயவனின் வீட்டுக்குக் கொண்டு செல்லும். என்னை முழுவதும் சுக்கு நூறாக உடைத்து, மறுபடியும் என்னை வனையும்...?..." என் ஸ்தோத்தரிக்கப்பட்ட இரட்சகரே, உமக்கே... நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 196. பரலோகப் பிதாவே, பாடல் தொடர்ந்து வாசிக்கப்படுகையில், நான் பாடலைப் பாடுவதை நிறுத்திவிட்டு, உம்மிடம் சற்று நேரம் பேசுவது மிகவும் பிரயோஜனமாயிருக்கும் என்று நான் எண்ணினேன். ஜனங்கள் “எல்லாவற்றையும் நான் ஒப்புவிக்கிறேன்” என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில், பிதாவே, அப்படி செய்ய இது தான் எங்களுக்களிக்கப்பட்ட கடைசி தருணம் போல் இதை செய்வார்களாக. நாங்கள் உத்தமத்துடன் வந்து, நாங்கள் கர்த்தருடைய மேசையண்டையில், கழுவப்பட்ட வஸ்திரங்களுடனும், கழுவப்பட்ட ஆத்துமாக்களுடனும், கழுவப்பட்ட சித்தங்களுடனும், கழுவப்பட்ட சுய ஆசைகளுடனும் வந்து எங்களையே ஒப்புவிப்போமாக. 197. தேவன், தம்முடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு எங்களை ஒருங்கே அதனோடு, தேவனுடைய வார்த்தையோடு பிணைப்பாராக. பரிசுத்த ஆவியானவர் எங்களை இப்பொழுது ஏற்றுக்கொள்வாராக, அந்த நுகம் எங்கள் இருதயங்களைச் சுற்றி இணைக்கப்படுவதை நாங்கள் கேட்டு உணரும்போது, "இன்றிரவு முதற்கொண்டு, நான் உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். இப்பொழுது உன்னுடைய சொந்த எண்ணங்களை எண்ணாதே. என் நினைவுகளையே சிந்திப்பார். என் சித்தத்தை எண்ணிப்பார். நான் உன்னை வழி நடத்துவேன்” என்று கூறுவதை கேட்போமாக. தேவனே, எங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவத்தை அருளுவீராக. 198 . இந்த வாலிபர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். கணவனும் மனைவியும்; சிலர் கணவனும் மனைவியுமாக ஆகப் போகின்றார்கள். இங்கு வயோதிக மனிதர்கள், பாதையினூடாக சென்று கொண்டிருக்கிற போதகர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, இங்கு நானும் சகோதரன் நெவில் அவர்களும் வயோதிகர்களாகிக் கொண்டிருக்கிறோம். எங்கள் நாட்கள் இப்பொழுது எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாங்கள் முன்பு எடுத்து வைத்த அடிகளைவிட அதிக ஜாக்கிரதையாக எங்களுடைய அடிகள் எடுத்து வைக்கப்படுகின்றன. நாங்கள் எங்கே அடியெடுத்து வைக்கிறோம் என்பதை நாங்களே கவனிக்கிறோம். சரீரப்பிரகாரமாக பார்க்கும்போது, நாங்கள் முன்பு செய்தது போல அவ்வளவு உறுதியாக காலடிகளை எடுத்து வைக்க முடிவதில்லை. ஆனாலும் கர்த்தாவே, மரித்து போகக் கூடிய இந்த வாழ்க்கை மங்கிக் கொண்டு வருவதை நாங்கள் காண்கிறபடியால், நீர் எங்களுடைய கரத்தைப் பிடிக்காமல், எங்களுடைய காலடிகள் எதுவுமே உறுதியாயிருக்க முடியாது. 199. இப்பொழுது தேவனே, எங்களை ஏற்றுக் கொள்ளும், அப்படி செய்வீரா? எங்கள் இருதயங்களையும் எங்கள் சித்தத்தையும் உமது கரங்களில் எடுத்துக் கொண்டு, இன்றிரவு நாங்கள் வார்த்தைக்கு, கிறிஸ்துவுக்கு, சிறைவாசிகளாய் மாறும்படிச் செய்யும். நாங்கள் இங்கு தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வோமாக. கர்த்தாவே, இந்த ஸ்திரீகளும், இந்த இளம் பெண்களும், இந்த இளைஞர்களும், பையன்களும், பெண்பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிப்பார்களாக. அவர்களுடைய பேராவல் இயேசு கிறிஸ்துவை சேவிக்கும்படியான பேராவலாக மாறுவதாக. நாங்கள் அவருடைய தெய்வீக கிருபைக்கும் சித்தத்துக்கும் ஒரு சிறைவாசியாக மாறுவோமாக. கர்த்தாவே, இதை அருளும். 200. கர்த்தாவே, இவ்வளவு தான் எனக்குச் செய்யத் தெரியும். இந்த கோர்வையற்ற சிறு வார்த்தைகளை, நீர் சரியாக அவைகளை கோர்த்துத் தருவீர் என்று நான்—நான் நம்புகிறேன். இங்கு உஷ்ணமாயுள்ளது. ஜனங்கள் கேட்க விரும்புகின்றனர். ஆனால் இங்கு உண்மையாக உஷ்ணமாயுள்ளது. அநேகர் வீடு திரும்பி நேரத்தோடே வேலைக்கு செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றனர். ஆனால் அந்த விதைகள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்து அவர்களை “ஒரு சிறைவாசியாக்குவதாக." 201. அவர்கள் வீடு திரும்பி தங்கள் மனைவியிடம்...அவர்கள் பிற்பகல் அல்லது மாலையில் படுக்கையருகில் ஜெபிக்க ஆயத்தமாவதற்கு முன்பு, ஒருவரையொருவர் பார்த்து, “அன்பே, நேற்றிரவு கேட்ட பிரசங்கத்தைக் குறித்தென்ன? நாம் உண்மையில் கிறிஸ்துவுக்கும் அவருடைய சித்தத்துக்கும் சிறைவாசிகளாகிவிட்டோமா, அல்லது—அல்லது நம்முடைய சுய சித்தத்தினூடாக கிரியை செய்கிறோமா?” என்று கேட்கும்படி செய்யும் 202 . எங்குமுள்ள வாலிபர்களும், வாலிப ஸ்திரீகளும் முக்கியமாக இன்றிரவு இந்த செய்தியைக் கேட்டிருக்கிறவர்கள், “என் சொந்த ஜீவனை வெறுத்து, நான் ஒரு சிறைவாசியாக சித்தம் கொண்டிருக்கிறேனோ?” என்னும் அதே கேள்வியை தங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்வார்களாக. 203 . “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்வான்.” பிதாவே, உமக்கு ஒரு சிறைவாசியாக மாறி உம்முடையதைக் கண்டறிய எங்களுடைய சுய ஆசைகளையும், எங்களுடைய சுய வாஞ்சைகளையும் விட்டுவிட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அப்பொழுதே எங்களுக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். கர்த்தாவே, இதை அருளும். 204. நான் அறிந்த ஒரேக் காரியம், இதை இப்பொழுது உமது கரங்களில் சமர்ப்பிப்பதேயாகும். அது பலனளிக்கும்படியாகி, கடைசி கால அறுவடைக்கு மகத்தான—மகத்தான கருவிகளை தோன்றச் செய்வதாக. மனிதரும், ஸ்திரீகளும், பையன்களும் பெண்களும் தேவனுடைய பரிபூரண சித்தத்துக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் சிறைவாசிகளாகி, அவருடைய அன்புக்கும், கிறிஸ்துவுக்கென தெய்வீக அன்பின் சங்கிலிகளினால் விலங்கிடப்பட்டவர்களாவார்களாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நாம் எழும்பி நிற்போமாக. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என்னுடைய ?...எல்லாவற்றையும் உமக்கே 205. நாம் கண்களை மூடியிருப்பதோடு நம்முடைய கரங்களையுயர்த்தி, நாம் அதை மறுபடியும் அப்படியே கூறுவோமாக. நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன், என் ஸ்தோத்தரிக்கப்பட்டஇரட்சகரே, எல்லாவற்றையும் உமக்கே, நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன். 206 . இப்பொழுது, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், என்னும் பாடலை கலைந்து செல்லுவதற்கான பாடலாக பாடுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமானால், இங்குள்ள இந்த சகோதரனை நான் ஜெபம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்போகிறேன்...நான் அவருடைய பெயரை மறந்துவிட்டேன். இருள் அவள் மேல் வருவதைக் குறித்து தரிசனம் கண்டதாக சகோதரி சாட்சி சொன்னாள். அவள் சுகமடைந்துவிட்டாள். ஞாபகம் கொள்ளுங்கள், அதன்பிறகு அவள் பார்த்தபோது, அந்த திரை போய்விட்டிருந்தது. அவளுடைய விசுவாசமே அதை செய்தது. சகோதரனே, நீங்கள் ஜெபம் செய்து எங்களை கலைந்து செல்லச் செய்வீரா? தேவனுடைய ஆசீர்வாதங்கள் எங்கள்மேல் தங்க வேண்டுமென்று, வேண்டிக்கொள்ளுங்கள்.